Post by Amritha Varshini on Jan 14, 2016 16:40:26 GMT 5.5
வணக்கம்!
ஈசனின் அருளால் மாணிக்கவாசகர் மீதும் அவர் எழுதிய திருவாசகத்தின் மீதும் கவிதை எழுத வேண்டுமென்று ஆவல் கொண்டு ஒரு சிறு முயற்சி செய்துள்ளேன்.
மாணிக்கவாசகரை இறைவன் ஆட்கொண்டு அவன் நடத்திய திருவிளையாடல் எண்ணில் அடங்கா. அவற்றை என்னால் இயன்றளவு இந்தக் கவிதையில் சொல்ல முயற்சித்துள்ளேன்.
ஆன்றோர்கள் சான்றோர்கள் போற்றிய திருவாசகத்தின் பெருமையை சொல்ல எனக்கு அருகதை இல்லை. மாணிக்கவாசகருக்கும் பெருமைமிகு திருவாசகத்திற்கும் இச்சிறியேனின் அன்புக்காணிக்கையே இந்த கவிதை.
மார்கழியில் ஆண்டாளின் திருப்பாவையும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் நெடுங்காலமாக பாடப்பெற்று வருகிறது. மார்கழி முதல் நாளன்று ஆண்டாளின் கவிதையை பகிர்ந்ததும் இப்பொழுது மார்கழியின் இறுதிநாளன்று மாணிக்கவாசகர் பற்றிய கவிதையை பகிர்வதும் எல்லாம் வல்ல இறைவனின் அருளேயன்றி வேறென்சொல்வது?
நம் அம்ருதவர்ஷினி அன்பர்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
அன்பர்கள் இக்கவிதையை படித்து தங்களுடைய கருத்தையும், நண்பர்களிடமும் பகிர வேண்டுகிறேன்.
அன்புடன்
ஆனந்த் வாசுதேவன்
14th JAN 2016 | மார்கழி 29 | குருக்ராமம்
திருவாசகம் அருளிய மணிவாசகம்
வாதவூரினில் தோன்றியருளிய மணிவாசகம்
வேதமிகு பெருமை கொண்ட அருள்வாசகம்
கீதமினிய குயிலிசையாம் இவ்வாசகம்
நாதன் பாதந்தனை அடைந்திடும் திருவாசகம் (1)
குருந்தவனமதில் கிடைத்த சிவஞானம்
அருவாய் ஒளிரும் மெய்ஞானம்
உருவாய் வந்தருளிய அருள்ஞானம்
குருவாய் தந்தருளிய ஆத்மஞானம் (2)
திருப்பெருந்துறையில் அடைந்ததோர் ஆனந்தம்
திருப்பணியில் திளைத்ததோர் பேரானந்தம்
திருத்தொண்டில் கிடைத்ததே சிரானந்தம்
திருச்சிற்றம்பலத்தில் ஒன்றியதே பிரமானந்தம் (3)
அற்புதம் நிகழ்ந்த ஆவணி மூலம்
நற்பதம் நல்கும் ஆதிமூலம்
கற்பகத் தருவாய் பொழியும் மூலம்
பொற்பதம் அடைய அவனே மூலம் (4)
பிட்டுக்கு மண் சுமக்கும் பேராளன்
பாட்டுக்கு பண் கொடுக்கும் சீராளன்
கட்டியிழுக்கும் புலனடக்கும் மணவாளன்
கட்டவிழ்த்து முத்தியளிக்கும் அங்கணாளன் (5)
கடலைச் சினந்த பெருமைமிகு வைகை
உடலைக் காக்க பெருகிய வைகை
கூடல் மாநகரை அணைக்கும் வைகை
ஆடல் அழகர் இறங்கும் வைகை (6)
சொக்கன் முதுகில் விழுந்த பிரம்படி
அக்கணம் யாவரும் அவனை உணர்ந்தபடி
தக்கன் வேள்வி தகர்த் தருளியபடி
முக்கண் உடையவனை பற்றிய திருவடி (7)
நரியை பரியாக்கிய மாயனவன்
பரியை நரியாக்கிய தூயனவன்
வரியை முதுகில் வாங்கிய நேயனவன்
எரியாடி தில்லையில் அருளும் ஆயனவன் (8)
ஏடும் எழுத்தாணியும் தேடிக் கொண்டான்
தோடுடைய செவியனை பாட்டில் கொண்டான்
காடுடையானை அவன் நாடிச் சென்றான்
வீடுபேறடைய மார்க்கம் சொன்னான் (9)
நாயேனென்று தன்னை குறைத்துக் கொண்டான்
பேயேனென்று தன்னை தாழ்த்திக் கொண்டான்
தாயேனென்று அவனை போற்றிக் கொண்டான்
சேயேனென்று அவனை அண்டிக் கொண்டான் (10)
பொருளுரைக்க வேண்டினர் தில்லைவாசகர்
மருளுரைத்தோரை வென்றான் குருமணிவாசகர்
அருளுறைத்து மறைந்தான் திருமணிவாசகர்
திருவுறையுள் கலந்தான் நம் மாணிக்கவாசகர் (11)
ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கும் ஒருவாசகம்
தேனினுமினிக்கும் தேவனைப் போற்றும் மணிவாசகம்
பொன்னம்பலத்தவன் எழுதி கைச்சாத்திட்ட அருள்வாசகம்
நானழித்து மறைபொருள் உணர்த்துமிந்த திருவாசகம் (12)
ஆனந்த் வாசுதேவன்
14th JAN 2016 | மார்கழி 29 | குருக்ராமம்
ஈசனின் அருளால் மாணிக்கவாசகர் மீதும் அவர் எழுதிய திருவாசகத்தின் மீதும் கவிதை எழுத வேண்டுமென்று ஆவல் கொண்டு ஒரு சிறு முயற்சி செய்துள்ளேன்.
மாணிக்கவாசகரை இறைவன் ஆட்கொண்டு அவன் நடத்திய திருவிளையாடல் எண்ணில் அடங்கா. அவற்றை என்னால் இயன்றளவு இந்தக் கவிதையில் சொல்ல முயற்சித்துள்ளேன்.
ஆன்றோர்கள் சான்றோர்கள் போற்றிய திருவாசகத்தின் பெருமையை சொல்ல எனக்கு அருகதை இல்லை. மாணிக்கவாசகருக்கும் பெருமைமிகு திருவாசகத்திற்கும் இச்சிறியேனின் அன்புக்காணிக்கையே இந்த கவிதை.
மார்கழியில் ஆண்டாளின் திருப்பாவையும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் நெடுங்காலமாக பாடப்பெற்று வருகிறது. மார்கழி முதல் நாளன்று ஆண்டாளின் கவிதையை பகிர்ந்ததும் இப்பொழுது மார்கழியின் இறுதிநாளன்று மாணிக்கவாசகர் பற்றிய கவிதையை பகிர்வதும் எல்லாம் வல்ல இறைவனின் அருளேயன்றி வேறென்சொல்வது?
நம் அம்ருதவர்ஷினி அன்பர்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
அன்பர்கள் இக்கவிதையை படித்து தங்களுடைய கருத்தையும், நண்பர்களிடமும் பகிர வேண்டுகிறேன்.
அன்புடன்
ஆனந்த் வாசுதேவன்
14th JAN 2016 | மார்கழி 29 | குருக்ராமம்
திருவாசகம் அருளிய மணிவாசகம்
வாதவூரினில் தோன்றியருளிய மணிவாசகம்
வேதமிகு பெருமை கொண்ட அருள்வாசகம்
கீதமினிய குயிலிசையாம் இவ்வாசகம்
நாதன் பாதந்தனை அடைந்திடும் திருவாசகம் (1)
குருந்தவனமதில் கிடைத்த சிவஞானம்
அருவாய் ஒளிரும் மெய்ஞானம்
உருவாய் வந்தருளிய அருள்ஞானம்
குருவாய் தந்தருளிய ஆத்மஞானம் (2)
திருப்பெருந்துறையில் அடைந்ததோர் ஆனந்தம்
திருப்பணியில் திளைத்ததோர் பேரானந்தம்
திருத்தொண்டில் கிடைத்ததே சிரானந்தம்
திருச்சிற்றம்பலத்தில் ஒன்றியதே பிரமானந்தம் (3)
அற்புதம் நிகழ்ந்த ஆவணி மூலம்
நற்பதம் நல்கும் ஆதிமூலம்
கற்பகத் தருவாய் பொழியும் மூலம்
பொற்பதம் அடைய அவனே மூலம் (4)
பிட்டுக்கு மண் சுமக்கும் பேராளன்
பாட்டுக்கு பண் கொடுக்கும் சீராளன்
கட்டியிழுக்கும் புலனடக்கும் மணவாளன்
கட்டவிழ்த்து முத்தியளிக்கும் அங்கணாளன் (5)
கடலைச் சினந்த பெருமைமிகு வைகை
உடலைக் காக்க பெருகிய வைகை
கூடல் மாநகரை அணைக்கும் வைகை
ஆடல் அழகர் இறங்கும் வைகை (6)
சொக்கன் முதுகில் விழுந்த பிரம்படி
அக்கணம் யாவரும் அவனை உணர்ந்தபடி
தக்கன் வேள்வி தகர்த் தருளியபடி
முக்கண் உடையவனை பற்றிய திருவடி (7)
நரியை பரியாக்கிய மாயனவன்
பரியை நரியாக்கிய தூயனவன்
வரியை முதுகில் வாங்கிய நேயனவன்
எரியாடி தில்லையில் அருளும் ஆயனவன் (8)
ஏடும் எழுத்தாணியும் தேடிக் கொண்டான்
தோடுடைய செவியனை பாட்டில் கொண்டான்
காடுடையானை அவன் நாடிச் சென்றான்
வீடுபேறடைய மார்க்கம் சொன்னான் (9)
நாயேனென்று தன்னை குறைத்துக் கொண்டான்
பேயேனென்று தன்னை தாழ்த்திக் கொண்டான்
தாயேனென்று அவனை போற்றிக் கொண்டான்
சேயேனென்று அவனை அண்டிக் கொண்டான் (10)
பொருளுரைக்க வேண்டினர் தில்லைவாசகர்
மருளுரைத்தோரை வென்றான் குருமணிவாசகர்
அருளுறைத்து மறைந்தான் திருமணிவாசகர்
திருவுறையுள் கலந்தான் நம் மாணிக்கவாசகர் (11)
ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கும் ஒருவாசகம்
தேனினுமினிக்கும் தேவனைப் போற்றும் மணிவாசகம்
பொன்னம்பலத்தவன் எழுதி கைச்சாத்திட்ட அருள்வாசகம்
நானழித்து மறைபொருள் உணர்த்துமிந்த திருவாசகம் (12)
ஆனந்த் வாசுதேவன்
14th JAN 2016 | மார்கழி 29 | குருக்ராமம்