Post by Amritha Varshini on Feb 26, 2015 4:40:12 GMT 5.5
ரமணஜோதி - 5
என்னைக் கைவிடாதே
இப்பழி தப்புனை யேனினைப் பித்தா
யினியார் விடுவா ரருணாசலா
பகவான் வேண்டுகிறார் ,”அருணாசலா, நீ என்னை எக்காரணத்தைக் கொண்டும் கை விடாதே. அப்படி கை விட்டால்,உனக்கு ஏற்படக்கூடிய பழியை யாராலும் துடைக்க முடியாது. அடைக்கலம் கொடுத்து விட்ட பின் உன்னை இனி யார் விடுவார்?”
நாம் ஒரு முறை ஸஹஜ சமாதியின் அனுபவம் பெற்றுவிட்டால் பிறகு இந்த இகலோக இந்திரிய ஜனிதமான சுக துக்கங்களால் பாதிக்கப்பட மாட்டோம். பகவானின் வாழ்க்கையே அதற்கு ஒர் எடுத்துக் காட்டு. மதுரையில் ஏற்பட்ட ஞானப் பிராப்திக்குப் பின் பகவான் எந்தவிதமான இஷ்டானிஷ்டங்களுமில்லாமல் அந்த பர பிரம்மாகவே வாழ்ந்து வந்தார்.
சிறு வயதிலேயே பகவானுக்கு அந்த அனுபவம் ஏற்ப்ட்டு விட்டதால் அந்த ஸஹஜ நிலையை நிரந்தரமாக்குவதற்கு சிறிது காலமாயிற்று. திருவண்ணாமலைக்கு வந்த பின் சிறிது காலத்திற்கு தனிமை தரக்கூடிய இடங்களை தேடித் தேடிப் போனார். அந்தக் காலங்களில்க் கூட சிறுவர்கள் கல்லாலடித்த போதும் எந்த விகாரமும் இல்லாமலேயே இருந்தார். தனிமையை நாடிப் போனது தனது பூரண அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டு விட்க் கூடாதே என்பதற்காகத் தான்.
ஆனால் அந்த ஞான நிலையிலும் கூட, எப்போதும் போல் உலகமும் அதன் விவகாரங்களும் விழிப்பில் தோன்றுவதும் தூக்கத்தில் மறைவதுமாக அனுபவித்துக் கொண்டு தானிருந்தார்.
ஆனால் இவையெல்லாம் நிஜமல்ல;ஒரு மாயை தான் என்று உணர்ந்தே இருந்தார். தனக்கு அன்னியமாக ஒன்றுமேயில்லை என்று உணர்ந்து யார், யாருக்கு உபதேசிப்பது என்று மௌனமாகவே இருந்து வந்தார். உண்மையில் பகவான் யாரையும் சீடனாக ஏற்றுக்கொண்டதும் கிடையாது.
தனது உண்மையிருப்பிலேயே மூழ்கிப் போயிருந்தமையால் அவருக்கு தன் உடலைப் பற்றீ எந்த உணர்வும் இல்லாமலேயே இருந்தார். சில காலம் குளிப்பது கூட இல்லாமல் இருந்தார்..தலை முடியெல்லாம் சிக்குப் பிடித்து சடையாகிவிட்டது .பகவானின் இந்த நிலையைக்கண்டு ஒரு கிழவி ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து சீயக்காய்த் தூள் தேய்த்து குளிப்பாட்டி விட்டாளாம். அந்த நேரங்களில் பகவான் ஒரு கற்சிலை போல் அமர்ந்திருப்பாராம்.ஆனால் எல்லாவற்றையும் உணர்ந்தவராகவும் இருப்பாராம். உணவு விஷயத்திலும் அப்படியே. பகவானுக்கு என்று விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது.
ஆனால் விரூபாக்ஷ குகையை விட்டு வந்த பிற்பாடு அவ்ர் சர்வ சஹஜமாக வெளியுலகத்துடன் விவகரித்தார். ஆனால் அவரை எதுவும் பாதிக்கவேயில்லை.
இம்மாதிரியான நிலை பரம சுகமான ஒரு நிலை. இதை கை நழுவ விட யாருக்குத் தான் மனம் வரும்? ஆகவே தான் பகவான் அருணாசலரிடம் மேற்கண்டவாறு அதிக உரிமை எடுத்துக் கொண்டு பயமுறுத்துவது போல் வேண்டுகோள் விடுக்கிறார்.
உண்மையில் அவர் இயற்றிய இந்த ஈரடிகள் நமக்காகவே என்பதில் எந்த ஐய்யவும் வேண்டாம்.
Article by Sri Hariharasarma [iyerha2@gmail.com]
என்னைக் கைவிடாதே
இப்பழி தப்புனை யேனினைப் பித்தா
யினியார் விடுவா ரருணாசலா
பகவான் வேண்டுகிறார் ,”அருணாசலா, நீ என்னை எக்காரணத்தைக் கொண்டும் கை விடாதே. அப்படி கை விட்டால்,உனக்கு ஏற்படக்கூடிய பழியை யாராலும் துடைக்க முடியாது. அடைக்கலம் கொடுத்து விட்ட பின் உன்னை இனி யார் விடுவார்?”
நாம் ஒரு முறை ஸஹஜ சமாதியின் அனுபவம் பெற்றுவிட்டால் பிறகு இந்த இகலோக இந்திரிய ஜனிதமான சுக துக்கங்களால் பாதிக்கப்பட மாட்டோம். பகவானின் வாழ்க்கையே அதற்கு ஒர் எடுத்துக் காட்டு. மதுரையில் ஏற்பட்ட ஞானப் பிராப்திக்குப் பின் பகவான் எந்தவிதமான இஷ்டானிஷ்டங்களுமில்லாமல் அந்த பர பிரம்மாகவே வாழ்ந்து வந்தார்.
சிறு வயதிலேயே பகவானுக்கு அந்த அனுபவம் ஏற்ப்ட்டு விட்டதால் அந்த ஸஹஜ நிலையை நிரந்தரமாக்குவதற்கு சிறிது காலமாயிற்று. திருவண்ணாமலைக்கு வந்த பின் சிறிது காலத்திற்கு தனிமை தரக்கூடிய இடங்களை தேடித் தேடிப் போனார். அந்தக் காலங்களில்க் கூட சிறுவர்கள் கல்லாலடித்த போதும் எந்த விகாரமும் இல்லாமலேயே இருந்தார். தனிமையை நாடிப் போனது தனது பூரண அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டு விட்க் கூடாதே என்பதற்காகத் தான்.
ஆனால் அந்த ஞான நிலையிலும் கூட, எப்போதும் போல் உலகமும் அதன் விவகாரங்களும் விழிப்பில் தோன்றுவதும் தூக்கத்தில் மறைவதுமாக அனுபவித்துக் கொண்டு தானிருந்தார்.
ஆனால் இவையெல்லாம் நிஜமல்ல;ஒரு மாயை தான் என்று உணர்ந்தே இருந்தார். தனக்கு அன்னியமாக ஒன்றுமேயில்லை என்று உணர்ந்து யார், யாருக்கு உபதேசிப்பது என்று மௌனமாகவே இருந்து வந்தார். உண்மையில் பகவான் யாரையும் சீடனாக ஏற்றுக்கொண்டதும் கிடையாது.
தனது உண்மையிருப்பிலேயே மூழ்கிப் போயிருந்தமையால் அவருக்கு தன் உடலைப் பற்றீ எந்த உணர்வும் இல்லாமலேயே இருந்தார். சில காலம் குளிப்பது கூட இல்லாமல் இருந்தார்..தலை முடியெல்லாம் சிக்குப் பிடித்து சடையாகிவிட்டது .பகவானின் இந்த நிலையைக்கண்டு ஒரு கிழவி ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து சீயக்காய்த் தூள் தேய்த்து குளிப்பாட்டி விட்டாளாம். அந்த நேரங்களில் பகவான் ஒரு கற்சிலை போல் அமர்ந்திருப்பாராம்.ஆனால் எல்லாவற்றையும் உணர்ந்தவராகவும் இருப்பாராம். உணவு விஷயத்திலும் அப்படியே. பகவானுக்கு என்று விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது.
ஆனால் விரூபாக்ஷ குகையை விட்டு வந்த பிற்பாடு அவ்ர் சர்வ சஹஜமாக வெளியுலகத்துடன் விவகரித்தார். ஆனால் அவரை எதுவும் பாதிக்கவேயில்லை.
இம்மாதிரியான நிலை பரம சுகமான ஒரு நிலை. இதை கை நழுவ விட யாருக்குத் தான் மனம் வரும்? ஆகவே தான் பகவான் அருணாசலரிடம் மேற்கண்டவாறு அதிக உரிமை எடுத்துக் கொண்டு பயமுறுத்துவது போல் வேண்டுகோள் விடுக்கிறார்.
உண்மையில் அவர் இயற்றிய இந்த ஈரடிகள் நமக்காகவே என்பதில் எந்த ஐய்யவும் வேண்டாம்.
Article by Sri Hariharasarma [iyerha2@gmail.com]