Post by Amritha Varshini on Oct 3, 2014 19:08:09 GMT 5.5
ரமணஜோதி
தொகுப்பாளர்:
கேரளக்கரையில் பத்தியூர் எனும் குக்கிராமத்தில் இராமய்யர்-கிருஷ்ணம்மாள் தம்பதியனருக்கு ஐந்தவது குழந்தையாக பிறந்தான் இந்த வியாக்கியானங்களின் தொகுப்பாளன். ராமனும் கிருஷ்ணனு ஒன்று தான் என்பது போல் ஹரியும் ஹரனும் ஒன்று தான் என்று தோன்றியதோ என்னவோ அந்தக் குழந்தைக்கு ஹரிஹரன் என்று பெயரிட்டு அழைத்தார்கள். இருபத்தி ஐந்து வயது வரை கேரளக்கரைக்கே உரித்தான இடதிசாரி மனோபாவத்துடன் வளர்ந்து வந்தான்.
தந்தையின் மறைவிற்கு பின் அவனது குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த காரணத்தால் அவனது கல்லூரிப் படிப்பு தொடர முடியாத நிலையேற்பட்டது. குறிகிய கால படிப்பு எதையாவது முடித்து விட்டு ஏதாவது வேலையில் சேர்ந்தால் தனது அண்ணன்மார்களுக்கு உதவியாக இருக்கலாமே என்று முடிவிற்கு வந்த தருணத்தில்—காந்திக்கிராமத்தின் நிறுவனரும் காந்திஜியின் உத்தம சிஷ்யயும் அன்றைய மத்திய மந்திரி சபையில் துணை கல்வி மந்திரியுமாயிருந்த திருமதி சௌந்திரம் ராமச்சந்திரன் அவர்களை சந்திக்க நேரிட்டது. அவர்களது ஊக்கத்தாலும் உதவியாலும் காந்திக்கிராம கிராமீண பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பிற்கு சேர்ந்தான் ஹரிஹரன்.
காந்திக்கிராமத்தில் அவன் தங்கியிருந்த நான்கு வருட காலம் அவனில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பண்டித நேரு, இராஜாஜி, ப.ஜீவானந்தம், யூ.என்.தேபர்,பேராசிரியர்.மன்மதன் போன்ற பல தலைவர்களை சந்திக்கவும் பழகவும் சந்தர்ப்பம் கிடைத்தது. கீதாச்சாரியனின் தர்மோபதேசங்களும் காந்திஜியின் கர்ம சன்யாசமும் நேருவின் நாட்டுப்பற்றும் ஜீவானந்தத்தின் தன்னம்பிக்கையும் அவனது இடதுசாரி மனோபாவத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கியது ஆன்மீக சிந்தனைக்கு ஒரு ஆழ்மான விதை ஊன்றப் பட்டது. ஆனால் 26 ஆவது வயதில் திருமணம்,அழகான மனைவி, நான்கு வருடங்களில் ஒரு மகன்,ஒரு மகள், இந்திய ரிசர்வு வங்கியில் நல்ல ஒரு உத்தியோகம், 65 வயது வரை அந்த விதை முளைக்கவில்லை.
மகன்-மகள் திருமணம் முடிந்து உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றபின் இகலோக பார்வையில் எல்லா வசதிகளும் இருந்தும் அவனுக்கு மன நிம்மதி இல்லை. அப்பொழுது யாரோ ஒருவர், “இப்படி கோவில் குளங்கள் என்று சுற்றி வருவதற்கு பதிலாக திருவண்ணாமலை ரமணாசிரமம் சென்று சிறிது நாட்கள் தங்கிவிட்டு வா; உனக்கு மன நிம்மதி கிடைக்கும்” என்று சொல்ல அவனும் ரமணாசிரம நிர்வாகிக்கு ஒரு நீண்ட மின்னஞ்சல் அனுப்ப உடனேயே அழைப்பு வந்தது. ரமணரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் சென்ற அவன் ஒருவாரம் கழித்து சென்னை திரும்பிய பொழுது ஒரு புது மனிதனாகியிருந்தான்.
மீண்டும் மீண்டும் திருவண்ணாமலை சென்றான். ரமணரைப் பற்றிய புத்தகங்களை படித்தான். அத்த்வைத சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டான்.
சங்கரரையும் அஷ்டவக்கிரரையும் வசிஷ்டரையும் படித்தான்.ரமணரின் விசார மார்க்கத்தை மேலும் தெளிவுபடுத்திக்கொண்டான்.
பிரம்மஸ்ரீ நொச்சூர் வெங்கடரமன்,ஸ்வாமி உதித் சைதன்யா,ஸ்வாமி பரமார்த்தானந்தா முதலியவர்களின் உபன்யாசங்களை கேட்டான்.
ஸ்வாமி சின்மயானன்தா, ஸ்வாமி சிவானந்தா, ஸ்வாமி விவேகானந்தர் முதலியவர்களின் புத்தகங்களை படித்தான்.
தான் தெரிந்துகொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.அப்படி பகிர்ந்துகொள்வதன் மூலம் தனது தவறுகளை திருத்திகொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்;தான் தெரிந்து கொண்டது மேலும் மனதில் உறுதிப்படும் என்று எண்ணினான்.அதன் விளைவு தான் இந்த எழுத்துக்கள்.
இங்கே எழுதியிருப்பவைகளில் எழுதப் போவதில் எதேனும் உபயோகமான தகவல்கள் இருந்தால் அந்த பெருமை மேலே கூறிய-கூறாமல் விட்டுப் போன பெரியோர்களையே சாரும். ஏதேனும் தவறுகள் இருந்தாலோ இதை எழுதிய ஹரிஹரனையே சாரும்.
முன்னுரை
முடிவில்லாத தேடல்
”பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பது தான் மனித வாழ்வின். தத்துவம்.
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து பதில் காணப்படாமல் இருந்து வரும் ஒரே ஒரு கேள்வி, இந்த உலகத்தின் ஆரம்பம் எது? முடிவு எது?
மனிதன் தேடிக்கொண்டேயிருக்கிறான். இதற்க்கான பதில் பாரத தேசத்து புராதன குரு பரம்பரை அளித்த உப நிஷத்துக்களில் உள்ளது..
உபனிஷத்துக்கள் உறுதியாகக் கூறும் ஒரே உண்மை, “இன்று உலகத்தில் காணும் எல்லா பொருள்களும் ஒரு உருவமற்ற சத்யத்திலிருந்து உண்டானது..அவை ஆடி அடங்குவதும் அந்த அருவமான சத்யத்தில் தான்..அந்த பரமமான சத்யத்தை சிலர் பிரம்மம் ,மற்று சிலர் பரப்பிரம்மம் என்றும் இன்னும் சிலர் பகவான் என்றும் கூறுகிரர்கள்.
ஓங்காரத்தின் பொருளும் இது தான். அகரம் என்றால் சத்,உகரம் சித்தையும் மகாரம் ஆனந்த்தையும் குறிக்கிறது.சத் சித் ஆனந்தம் தான் பகவான்.
கடலிலிருந்து எழும் அலைகள் தொடர்ந்து கரையில் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கிறது. அவை வரும்பொழுது தனித்தனியாக வருகிறது.அவைகளை ஒன்று இரண்டு என்று எண்ணலாம்.ஆனால் அவை எல்லாம் கடலிருந்துதான் வருகிறது..திரும்ப சென்றடைவதும் கடலில்த்தான். கடல் நீரிலிருந்து வேறுபட்ட ஒரு இயல்பு/இருப்பு அவைகளுக்கு கிடையாது.ஒவ்வொரு அலையும் வரும்பொழுது கணக்கிலடங்கா நீர்த்திவலைகள் தெறித்து விழுகின்றன.அந்த நீர்த்திவலைகளுக்கும் அலைகளிலிருந்தோ கடல் நீரிலிருந்தோ தனியான இருப்பு இல்லை. அதேபோல் நாமும் எல்லா சரா சரங்களும் அந்த பரப்பிரம்மத்தின் பகுதிதான்.
அந்த பரப்பிரம்மத்தின் அருளோடு நான் இந்த மின்னன்சல் பரம்பரையை தொடங்குகிறேன்
Article by Sri Harihara Sarma (iyerha2@gmail.com)