Post by J.K. SIVAN on Aug 8, 2013 5:57:44 GMT 5.5
வேமனாவின் சதகத்தில் சில :
நிக்கமைன மஞ்சி நீலம் ஒக்கட்டி சாலு
தளுகு பெளுகு தட்டெடேல?
காடு பத்ய மிலனு சாலதா ஒக்கடைன
விஸ்வதாபி ராம வினுர வேமா
ஒரு பெரிய தட்டு ரொம்ப கலர் கலராக கண்ணைப்பறிக்கும் கண்ணாடி கற்கள் மினுமினுக்கி என்ன பயன். ஒரு நல்ல ஜாதி நீலக்கல்லுக்கு அவை அத்தனையும் ஈடாகுமா ? குப்பை குப்பையாக எதெல்லாமோ படிப்பதை விட பளிச்சென்று ஒரு சிறு அர்த்தமுள்ள, மனசில் பதியும் பதிகம் ஒன்றே போதுமே.
அல்புடெபுடு பலகுனு ஆடம்பரமுகானு
சஜ்ஜனுண்டு பலகு சல்லகானு
கஞ்சு ம்ரோகுனட்லு கனகம்பு ம்ரோகுணா
விஸ்வதாபிராம வினுர வேமா
வெங்கலபாத்திரத்தின் மீது சும்மா ஒரு தட்டு தட்டினாலும் கணீர் என்று ஒலிக்கிறது. ஆனால் தங்கப்பாத்திரத்தின் மீது தட்டினால் அவ்வளவு சத்தம் இல்லையே? அரை வேக்காடுகள் சத்தத்திற்கும் அறிஞர்களின் மௌனத்திற்கும் இதுதான் காரணமோ?
ஆலி மாடலு வினி அன்ன தம்புலு பாஸி
வேறெ போவுவாடு வெர்ரி வாடு
குக்க தோக பட்டி கோதாவரிதுனா
விஸ்வதாபிமானா வினுர வேமா
பெண்டாட்டி பேச்சில் அடிபணிந்து ஞாயம் பார்க்காமல் உடன் பிறந்தாருடன் சண்டையிட்டு தனிக்குடித்தனம் வைத்தவன் பைத்தியம் தான். நாயின் வாலை நம்பி கெட்டியாக பிடித்துக்கொண்டு கோதாவரி நதியை கடக்கப்பார்க்கிறானோ?
ஏமி கொஞ்சுவச்சே ஏமிதா கோனி போவு
புட்டு வேள நறுடு கிட்டு வேள
தனமு லேசடி கேக்கு தானெச்சடி கேக்கு
விஸ்வதாபிமானா வினுர வேமா
என்னத்தை கொண்டுவந்தே, என்னத்தை கொண்டுபோகப் போறே ! நீ சேர்த்து வச்சதெல்லாம் எங்கேயோ போகப்போகிறது, நீயே எங்கேயோ போகப்போறே உனக்கே இது தெரியபோறதில்லே . ஏன் அகட விகட சாமர்த்தியம் எல்லாம். ஆச்சர்யமாயில்லை?
கங்கை பாறு னெபுடு கதலனி கதிதோட
முருகி வாகு பாரு ம்ரோத தோட
அதிகுபோர்ர்சு னட்டு லதாமு போற்பகலேது
விஸ்வதாபிமானா வினுர வேமா
ஏற்கனவே சொன்ன ஒரு வாசகத்துக்கு இன்னொரு உதாரணம் இந்த பதிகத்தில் வருகிறது. கங்கை பிரவாகமாக இருந்தாலும் அமைதியாக ஓடுகிறது ஓடுவதே தெரியவில்லை, நிற்கிறாற் போல தான் தெரிகிறது. சத்தம் இல்லை.
தெருவில் கொஞ்சம் தண்ணீர் சேர்ந்ததும் இந்த சாக்கிரதை ஒ வென்று சந்தத்துடன் ஓடுவதைப் பார். கற்றுணர்ந்த ஞாநியின் மிருதுவான பேச்சையும் அரைவேக்காட்டின் ஆரவாரத்தையும் அல்லவா நினைவூட்டுகிறது.
கனக சொம்முலேன்னோ கனகம்ப தொக்கட்டே
பசுலவன்னே லென்னோ பாலொகட்டியே
புஷ்பஜாதுலேன்னோ பூஜ யொக்கடெ சுமா
விஸ்வதாபிமானா வினுர வேமா
அது உயர்ந்த ஜாதி , நாட்டு மாடு எதுவானாலும் அதன் பால் ஒன்று தானே. வித விதமா வேறே வேறே பேரிலே நீ நகை வாங்கினாலும் எல்லாம் ஒரே தங்கத்தினாலே தான் பண்ணினது. அப்படியே தான் நீ கூடை பூ வெவ்வேறு மனத்திலே வாங்கி பண்ணினாலும் ஒரே ஒரு தும்பை பூவை போட்டு பண்ணினாலும் பூஜை ஒன்று தான் .