|
Post by Amritha Varshini on Mar 17, 2014 13:07:20 GMT 5.5
சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்.( ஸ்ரீஜகத்குரு மஹாஸ்வாமிகள்)
1.நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்கராகாய மஹேச்வராய! நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகராய நம:சிவாய!!
நாகங்களை ஹாரமாகக் கொண்டவரும், விலக்ஷணயான கண்ணையுடையவரும், விபூதி பூசியவரும், மஹேச்வரனாயும், நித்யராயும் சுத்தராயும், திசைகளையே ஆடையாக உடையவருமான அந்த நகாரஸ்வரூபினியான சிவனுக்கு நமஸ்காரம்.
2.மந்தாகிநீஸலில சந்தனசர்ச்சிதாய நந்தீச்வரப்ரமத நாதமஹேச்வராய! மந்தாரமுக்ய பஹுபுஷ்பஸு பூஜிதாய தஸ்மை மகாராய நம:சிவாய!!
தேவகங்கைத் தண்ணீர் புஷ்பம் இவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், நந்திகேச்வரர், பிரமதர்கள் இவர்களுக்குத் தலைவரும், மந்தாரம் முதலிய பல நல்ல புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும் ஆன அந்த மகாரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.
3.சிவாய கௌரீவதனாப்ஜப்ருந்த- ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய! ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை சிகாராய நம:சிவாய!!
பார்வதீ முகமாகிய தாமரைக்கொத்துக்கு சூர்யனாயிருப்பவரும், தக்ஷனின் யாகத்தை ஒடுக்கியவரும், நீலகண்டரும், வ்ருஷபக்கொடி கொண்டவரும் ஆன அந்த சிகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.
4.வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய- முனீந்தர தேவார்சித சேகராய! சந்த்ரார்கவைச்வாநர லோசனாய தஸ்மை வகாராய நம:சிவாய!!
வசிஷ்டர், அகஸ்த்யர், கௌதமர் போன்ற முனிவர்களும், தேவர்களும் பூஜித்த உச்சியையுடையவரும், சந்திரன், சூர்யன், அக்னி ஆகிய கண்களையுடையவருமாகிய அந்தவகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.
5.யக்ஷஸ்வரூபாய ஜடாதராய பிநாகஹஸ்தாய ஸநாதனாய! திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை நகராய நம:சிவாய!!
யக்ஷஸ்வரூபியாவும், ஜடைதரித்தராயும், பிநாகவில்லை கையில் கொண்டவரும், பழமையன தேவரும் திகம்பரருமான அந்த யகாரரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.
சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் முற்றிற்று
Courtesy - Sage of Kanchi Facebook - www.facebook.com/groups/Periyavaa/
|
|