|
Post by Amritha Varshini on Mar 8, 2014 16:37:41 GMT 5.5
காயத்ரீ மந்திரத்தினுடைய பலன்
பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்துப் பண்ணுகிறேன் என்று சொலுகிறோம்.
காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்தி தான்; மனமாசு அகலுவது தான்.
மற்ற மந்திரங்களினால் உண்டாகின்ற பலன்கள் எல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாக்கத்தான் இருக்கின்றன. அதுவே காயத்ரீக்கு நேரான பலன்; ஒரே பலன்.
பணம் சம்பாதிக்கிறாயா? சம்பாதித்து விட்டுப் போ. ஆனால் அதை தார்மீகமாகப் ப்ரயோஜனப் படுத்தினாயானால் அதுவே உன் சித்தத்தைப் பரிசுத்தி பண்ண உதவும்.
மனசு சுத்தம், டிஸிப்ளின் இல்லாமல் வராது. உள் டிஸிப்ளின் வெளி டிஸிப்ளின் இல்லாமல் வராது. ரூல்களும், ஃபார்மாலிடிகளும், வெளிக்கார்யங்களும், அந்தக் கார்யங்களைப் பொருத்த அநேக ஸித்தியாஸங்களும் இல்லாமல் வெளி டிஸிப்ளின் இல்லவே இல்லை.
கார்யம் ஓயாத உழைப்பு இல்லாமல் சித்த சுத்தி ஸாத்யமேயில்லை. நெறி இல்லாமல் செய்வதாலேயே ஆசையும், அழுக்கும் அதிகமாகின்றன. அதையே நெறியோடு செய்தால் சாந்தியும் சுத்தியும் ஏற்பட ஆரம்பிக்கின்றன.
அஹங்காரம் மாதிரியே பயம், தாழ்வுணர்ச்சி, சந்தேகம் எல்லாம் அழுக்குகள். இவை இருக்கிற வரையில் சித்தம் சுத்தமாகாது.
நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ, அத்தனை முளைகளைத் துக்கத்திற்கு அடித்துக் கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம்.
ஆசைகளைக் குறைக்க குறைக்க துக்க ஹேதுவும் குறையும்.
|
|