Post by jksivan on Jan 11, 2014 6:00:12 GMT 5.5
மார்கழி 27ம் நாள் -
இந்த தீஞ்சொல் பாசுரத்தின் முதலடியையே பண்டிகையாககொண்டது. 'கூடாரை வெல்லி'' கரைந்து தேய்ந்து கூடார வல்லி ஆகிவிட்டது திரு அல்லிக்கேணி ட்ரிப்ளிகேன் ஆனமாதிரி.
''கோதை, நீ என் பெண்ணல்ல. என்னை உய்விக்க வந்த அந்த மகாலட்சுமி தாயார் தான் என்பதில் கோதா ஸ்துதியில்.துளியும் எனக்கு சந்தேகமில்லை. பெரியாழ்வார் ஆன விஷ்ணுசித்தர் சொன்னதை எதிரொலிக்கிறார் கோதா ஸ்துதியில் சுவாமி வேதாந்த தேசிகன் இதோ:
ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தக யோக த்ருச்யாம்!
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!!
கோதையே, நீ ஸ்ரீ விஷ்ணுசித்தருடைய குலத்தில் பெண்ணாக வந்த , கேட்பதை அனைத்தும் வாரித் தரும் கற்பகக் கொடி. அரங்கன் ஒரு சந்தன மரம். நீ அவனைச் சுற்றிப் படர்ந்திருக்கின்ற கற்பகக் கொடி. பூமிதேவியே கோதையாக அவதரித்தாளோ அல்லது ஸ்ரீலக்ஷ்மியே கோதையாக வடிவெடுத்தாளோ, வேறு புகலற்ற நான், கோதை நாச்சியாரைச் சரணடைகிறேன் .(கோதா ஸ்துதி, ஸ்வாமி ஸ்ரீ தேசிகர்).
ஆண்டாள் என்று ஒவ்வொரு சந்நிதியிலும் பெருமாளோடு தரிசனம் தருபவள் கோதை தான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயார் வாங்கியவள். பூமாதேவி, அவதாரம். கலியுகத்தில், பக்தர்களை உய்விக்க வேண்டி, எம்பெருமானின் கட்டளையை ஏற்று, திருவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் திருமகளாக, துளசி வனத்தில் தோன்றியவள் கோதை. சகல வேதங்களையும் பிழிந்து வடிகட்டினால் கிடைக்கும் சாரம் தான் திருப்பாவை.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள் இப்போது இடைச்சிருமியா அல்லது பழுத்த ஞானியா? என்று சந்தேகிக்கும் அளவிற்கு அவள் கண்ணனுடன் கலந்து விட்டாள்
இந்தத் திருப்பாவையில் கண்ணன் ஆண்டாளின் கைப்பாவை ஆகிவிட்டதல்லவோ அதிசயம்! என்னமாய் அவள் கண்ணனிடம் பேசுகிறாள் பாருங்களேன்.
''கண்ணா! உன் புகழ் பாடி நோன்பு நோற்று அது நிறைவேறும்
நிலையில் உன்னிடம் வேண்டுவன எல்லாம் கேட்டு பெற்று நோன்பின் பயன் அடைந்தோமே. இந்த சிறுமிகளுக்கு நீ தக்க சன்மானம் தரவேண்டுமல்லவா? முதலில் இந்த ஆயர்குல சிறுமிகள் நோன்பு முடியும் இந்த நேரத்தில் நல்ல புத்தாடைகள் உடுத்து, கை கால் கழுத்து நிறைய நகைகள் அணிந்து, மலர்கள் சூட்டிக்கொண்டு இனிப்பான கமகம வென மணக்கும் நெய், பால், சர்க்கரை கலந்து உனக்கு நைவேத்யம் கொண்டுவந்திருக்கிரார்களே தெரியவில்லையா?
அக்கார வடிசல் கை நிறைய எடுத்துக் கொள். முழங்கை வழியாக நெய் வழிய வழிய உண்ண நீயும் எங்களோடு வா, கண்ணா, வா ! எங்களுடன் நீயும் மகிழ்சசியோடு உண்ண வாயேன் !! ஆண்டாளின் இந்த 27 வது பாசுர ம் மிக அருமையான ஒன்று. அவள் சொல்கிற ஒவ்வொரு சொல்லும் நெய், பால் சர்க்கரை பொங்கலைப் போன்று இனிக்க வல்லது என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ?
திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரமும், பாவை நோன்பு, செய்யவேண்டும், தோழியரை பாவை நோன்புக்கு பங்கு கொள்ள வாருங்களேன் என்று தூக்கத்திலிருந்து எழுப்புவது என்று அமைகிறது.
ஆண்டாளின் இந்த 27 வது பாசுரம் மிக அருமையான ஒன்று. அவள் சொல்லும் நெய், பால் சர்க்கரைபொங்கலைப்
போன்று இனிக்க வல்லது என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ?
இந்த தீஞ்சொல் பாசுரத்தின் முதலடியையே பண்டிகையாககொண்டது. 'கூடாரை வெல்லி'' கரைந்து தேய்ந்து கூடார வல்லி ஆகிவிட்டது திரு அல்லிக்கேணி ட்ரிப்ளிகேன் ஆனமாதிரி.
''கோதை, நீ என் பெண்ணல்ல. என்னை உய்விக்க வந்த அந்த மகாலட்சுமி தாயார் தான் என்பதில் கோதா ஸ்துதியில்.துளியும் எனக்கு சந்தேகமில்லை. பெரியாழ்வார் ஆன விஷ்ணுசித்தர் சொன்னதை எதிரொலிக்கிறார் கோதா ஸ்துதியில் சுவாமி வேதாந்த தேசிகன் இதோ:
ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தக யோக த்ருச்யாம்!
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!!
கோதையே, நீ ஸ்ரீ விஷ்ணுசித்தருடைய குலத்தில் பெண்ணாக வந்த , கேட்பதை அனைத்தும் வாரித் தரும் கற்பகக் கொடி. அரங்கன் ஒரு சந்தன மரம். நீ அவனைச் சுற்றிப் படர்ந்திருக்கின்ற கற்பகக் கொடி. பூமிதேவியே கோதையாக அவதரித்தாளோ அல்லது ஸ்ரீலக்ஷ்மியே கோதையாக வடிவெடுத்தாளோ, வேறு புகலற்ற நான், கோதை நாச்சியாரைச் சரணடைகிறேன் .(கோதா ஸ்துதி, ஸ்வாமி ஸ்ரீ தேசிகர்).
ஆண்டாள் என்று ஒவ்வொரு சந்நிதியிலும் பெருமாளோடு தரிசனம் தருபவள் கோதை தான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயார் வாங்கியவள். பூமாதேவி, அவதாரம். கலியுகத்தில், பக்தர்களை உய்விக்க வேண்டி, எம்பெருமானின் கட்டளையை ஏற்று, திருவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் திருமகளாக, துளசி வனத்தில் தோன்றியவள் கோதை. சகல வேதங்களையும் பிழிந்து வடிகட்டினால் கிடைக்கும் சாரம் தான் திருப்பாவை.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள் இப்போது இடைச்சிருமியா அல்லது பழுத்த ஞானியா? என்று சந்தேகிக்கும் அளவிற்கு அவள் கண்ணனுடன் கலந்து விட்டாள்
இந்தத் திருப்பாவையில் கண்ணன் ஆண்டாளின் கைப்பாவை ஆகிவிட்டதல்லவோ அதிசயம்! என்னமாய் அவள் கண்ணனிடம் பேசுகிறாள் பாருங்களேன்.
''கண்ணா! உன் புகழ் பாடி நோன்பு நோற்று அது நிறைவேறும்
நிலையில் உன்னிடம் வேண்டுவன எல்லாம் கேட்டு பெற்று நோன்பின் பயன் அடைந்தோமே. இந்த சிறுமிகளுக்கு நீ தக்க சன்மானம் தரவேண்டுமல்லவா? முதலில் இந்த ஆயர்குல சிறுமிகள் நோன்பு முடியும் இந்த நேரத்தில் நல்ல புத்தாடைகள் உடுத்து, கை கால் கழுத்து நிறைய நகைகள் அணிந்து, மலர்கள் சூட்டிக்கொண்டு இனிப்பான கமகம வென மணக்கும் நெய், பால், சர்க்கரை கலந்து உனக்கு நைவேத்யம் கொண்டுவந்திருக்கிரார்களே தெரியவில்லையா?
அக்கார வடிசல் கை நிறைய எடுத்துக் கொள். முழங்கை வழியாக நெய் வழிய வழிய உண்ண நீயும் எங்களோடு வா, கண்ணா, வா ! எங்களுடன் நீயும் மகிழ்சசியோடு உண்ண வாயேன் !! ஆண்டாளின் இந்த 27 வது பாசுர ம் மிக அருமையான ஒன்று. அவள் சொல்கிற ஒவ்வொரு சொல்லும் நெய், பால் சர்க்கரை பொங்கலைப் போன்று இனிக்க வல்லது என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ?
திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரமும், பாவை நோன்பு, செய்யவேண்டும், தோழியரை பாவை நோன்புக்கு பங்கு கொள்ள வாருங்களேன் என்று தூக்கத்திலிருந்து எழுப்புவது என்று அமைகிறது.
ஆண்டாளின் இந்த 27 வது பாசுரம் மிக அருமையான ஒன்று. அவள் சொல்லும் நெய், பால் சர்க்கரைபொங்கலைப்
போன்று இனிக்க வல்லது என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ?