Post by jksivan on Jan 2, 2014 23:55:05 GMT 5.5
மார்கழி 23வது நாள்
முன்னேற்றம் என்பது ஒரேயடியாக மேலே தாவுவது அல்ல. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் படிப்படியாக,
கொஞ்சம்கொஞ்சமாக மேலே செல்வது.இந்தச் சிறு பெண் ஆண்டாள் எப்படி முதலில் மற்ற சிறுமியர்களை அழைத்தாள்.கூட்டம் போதவில்லை என்று வராதவர்கள்வீடெல்லாம் சென்று அவர்களை தட்டிஎழுப்பினாள்.
அனைவரையும் ஒன்று சேர்த்து தினமும் குளிர்ந்த நீரில் நீராடவைத்து அவர்கள் அனைவரும் பாவை நோன்பு
நோற்க வைத்தாள். பின்னர் நந்தகோபன் மாளிகை சென்றாள். அவனை எழுப்பியதோடல்லாமல் யசோதையை, பலராமனை,
நப்பின்னையை எழுப்பினாள்.
எழுபபியும் எழுந்திராத கண்ணனையும எழுப்
பிவிட்டாள். கிருஷ்ணனை அவன் கட்டிலுக் கருகே
நின்று அவர்கள் எல்லோரும் அவனது திவ்ய தரிசனம் கண்டு, அவனது க்ருபா கடாக்ஷம் வேண்டுமென்று, பார்வை
தங்கள் மேல் விழுந்து பாபங்கள் அகலவேண்டுமென்று சரணாகதிஅடைந்தனர் என்பது இதுவரை கதை.
இதற்குள் மார்கழி 22நாள் கழிந்துவிட்டதே!!
++
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
''சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்''
இந்தப் பாசுரம் கொஞ்சம் எனக்கு புரிய வைக்கிறீர்களா ? வட பத்ர சாயி கோவில் பட்டச்சர்யாரும் அவர் மனைவியும் கையைகாட்டிக்கொண்டு விஷ்ணுசித்தர் முன்பு நின்றார்கள். அருகில் சில வைணவர்களும் பதிலுக்குக் காத்திருந்தபோது விஷ்ணு சித்தர் .என்ன சொன்னார்?
அவர் சொன்னது தான் அந்த ஆயர்பாடிச்சிறுமி ஆண்டாள் சொன்னதின் விவரமாகும். எனவே அந்த ஆண்டாள் அன்று காலை கண்ணனை நந்தகோபன் அரண்மனையில் சந்தித்தபோது அவள் விவரித்ததை முதலில் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
+++
இன்று மார்கழி 23ம் நாள். கிடைத்த சந்தர்ப்பத்தை விடுபவளா அந்த சிறுமி ஆண்டாள். தட்டிக் கொடு த்து வேலை வாங்குவதில்
கில்லாடி அல்லவா அவள்!.
"கிருஷ்ணா, உன்னை பார்க்கும்போ து எனக்கு என்ன மனதில் தோன்றுகிறது தெரியுமா?. ஒரு அடர்ந்த வனத்தில் பெரிய
மலைஅடிவாரத்தில் இயற்கையாக அமைந்த ஒரு பெரும் குகையில், தனது ராணியுடன் மழை காலத்தில் அடக்கமாக உறங்கும் சிங்க ராஜா மழை கொஞ்சம் விட்டதும்,தன் நெருப்பு போன்ற சிவந்த கண்களை சுழற்றி அடர்ந்த பரந்த பிடரியை உலுக்கிவிட்டு, தலையைத் தூக்கி வெளியே அமர்த்தலாக வந்து கம்பீர நோட்டம் விடுவது, பிறகு ராஜ நடை நடந்து வெளியே வந்து ஒரு பாறை மேல் அமர்ந்து சிம்மக்குரலில் கர்ஜனை செய்து காட்சியளிப்பது போல் உள்ளது, காயாம்பூ வண்ண மலரணிந்த கண்ணா, அந்த சிங்கத்தை
போல் தலை உயர்த்தி, எழுந்து ராஜ நடை போட்டு இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து “பெண்களே, எதற்கு வந்து என்னை
எழுப்பினீர்கள் , என்ன வேண்டும்" என்று நீ கேட்டாயானால் நாங்கள் கேட்காமலேயே எங்களுக்கு உன் அருள் உண்டு, எங்கள் நோன்பின் பயன் அடைந்தோம் என்று அர்த்தமாக எடுத்து கொள்வோம். எங்கள் மீது உன் கருணையை தந்து ரட்சிக்க வேண்டும்”
-- நமக்காகவும் தான் .ஆண்டாள் இதைவேண்டுகிறாள். இந்த பாசுரத்தில்ஆண்டாள் கிருஷ்ணனை நரசிம்ஹ மூர்த்தியாக பார்க்
கிறாள். மிருகம் இந்த இடத்தில் சிங்கத்தை குறிக்கிறது. நரசிம்ஹனும் நாராயணனின் அவதாரம் தானே. தவிர இன்று ஸ்ரீ வில்லி
புத்தூரில் ஸ்ரீ ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு உத்சவம். 16 வண்டி சப்பரத்தில் பவனி. ஊர்வலத்தில் மனதாலேயே கலந்து
கொண்டு திரும்பி நாளை மார்கழி 24ம்நாள் சந்திப்போம்.
முன்னேற்றம் என்பது ஒரேயடியாக மேலே தாவுவது அல்ல. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் படிப்படியாக,
கொஞ்சம்கொஞ்சமாக மேலே செல்வது.இந்தச் சிறு பெண் ஆண்டாள் எப்படி முதலில் மற்ற சிறுமியர்களை அழைத்தாள்.கூட்டம் போதவில்லை என்று வராதவர்கள்வீடெல்லாம் சென்று அவர்களை தட்டிஎழுப்பினாள்.
அனைவரையும் ஒன்று சேர்த்து தினமும் குளிர்ந்த நீரில் நீராடவைத்து அவர்கள் அனைவரும் பாவை நோன்பு
நோற்க வைத்தாள். பின்னர் நந்தகோபன் மாளிகை சென்றாள். அவனை எழுப்பியதோடல்லாமல் யசோதையை, பலராமனை,
நப்பின்னையை எழுப்பினாள்.
எழுபபியும் எழுந்திராத கண்ணனையும எழுப்
பிவிட்டாள். கிருஷ்ணனை அவன் கட்டிலுக் கருகே
நின்று அவர்கள் எல்லோரும் அவனது திவ்ய தரிசனம் கண்டு, அவனது க்ருபா கடாக்ஷம் வேண்டுமென்று, பார்வை
தங்கள் மேல் விழுந்து பாபங்கள் அகலவேண்டுமென்று சரணாகதிஅடைந்தனர் என்பது இதுவரை கதை.
இதற்குள் மார்கழி 22நாள் கழிந்துவிட்டதே!!
++
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
''சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்''
இந்தப் பாசுரம் கொஞ்சம் எனக்கு புரிய வைக்கிறீர்களா ? வட பத்ர சாயி கோவில் பட்டச்சர்யாரும் அவர் மனைவியும் கையைகாட்டிக்கொண்டு விஷ்ணுசித்தர் முன்பு நின்றார்கள். அருகில் சில வைணவர்களும் பதிலுக்குக் காத்திருந்தபோது விஷ்ணு சித்தர் .என்ன சொன்னார்?
அவர் சொன்னது தான் அந்த ஆயர்பாடிச்சிறுமி ஆண்டாள் சொன்னதின் விவரமாகும். எனவே அந்த ஆண்டாள் அன்று காலை கண்ணனை நந்தகோபன் அரண்மனையில் சந்தித்தபோது அவள் விவரித்ததை முதலில் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
+++
இன்று மார்கழி 23ம் நாள். கிடைத்த சந்தர்ப்பத்தை விடுபவளா அந்த சிறுமி ஆண்டாள். தட்டிக் கொடு த்து வேலை வாங்குவதில்
கில்லாடி அல்லவா அவள்!.
"கிருஷ்ணா, உன்னை பார்க்கும்போ து எனக்கு என்ன மனதில் தோன்றுகிறது தெரியுமா?. ஒரு அடர்ந்த வனத்தில் பெரிய
மலைஅடிவாரத்தில் இயற்கையாக அமைந்த ஒரு பெரும் குகையில், தனது ராணியுடன் மழை காலத்தில் அடக்கமாக உறங்கும் சிங்க ராஜா மழை கொஞ்சம் விட்டதும்,தன் நெருப்பு போன்ற சிவந்த கண்களை சுழற்றி அடர்ந்த பரந்த பிடரியை உலுக்கிவிட்டு, தலையைத் தூக்கி வெளியே அமர்த்தலாக வந்து கம்பீர நோட்டம் விடுவது, பிறகு ராஜ நடை நடந்து வெளியே வந்து ஒரு பாறை மேல் அமர்ந்து சிம்மக்குரலில் கர்ஜனை செய்து காட்சியளிப்பது போல் உள்ளது, காயாம்பூ வண்ண மலரணிந்த கண்ணா, அந்த சிங்கத்தை
போல் தலை உயர்த்தி, எழுந்து ராஜ நடை போட்டு இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து “பெண்களே, எதற்கு வந்து என்னை
எழுப்பினீர்கள் , என்ன வேண்டும்" என்று நீ கேட்டாயானால் நாங்கள் கேட்காமலேயே எங்களுக்கு உன் அருள் உண்டு, எங்கள் நோன்பின் பயன் அடைந்தோம் என்று அர்த்தமாக எடுத்து கொள்வோம். எங்கள் மீது உன் கருணையை தந்து ரட்சிக்க வேண்டும்”
-- நமக்காகவும் தான் .ஆண்டாள் இதைவேண்டுகிறாள். இந்த பாசுரத்தில்ஆண்டாள் கிருஷ்ணனை நரசிம்ஹ மூர்த்தியாக பார்க்
கிறாள். மிருகம் இந்த இடத்தில் சிங்கத்தை குறிக்கிறது. நரசிம்ஹனும் நாராயணனின் அவதாரம் தானே. தவிர இன்று ஸ்ரீ வில்லி
புத்தூரில் ஸ்ரீ ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு உத்சவம். 16 வண்டி சப்பரத்தில் பவனி. ஊர்வலத்தில் மனதாலேயே கலந்து
கொண்டு திரும்பி நாளை மார்கழி 24ம்நாள் சந்திப்போம்.