|
Post by Amritha Varshini on Aug 5, 2013 19:04:09 GMT 5.5
மனதிற்கு உபதேசம் கீர்த்தனை(21)-கோடிநதிலு தனுஷ்கோடிலோ நுண்டக ராகம்-தோடி-தாளம்-ஆதி நீல வர்ண காந்தியுடைய சுந்தரமூர்த்தியை (ராமனை) சதா குறி தவறாமல் தரிசித்துக்கொண்டிருக்கும் பரமயோகிகளுக்கு கோடி நதிகள் தனுஷ்கோடியில்(குண்டலினியில் அல்லது புருவமத்தியில்)இருக்கும்பொழுது நீ ஏன் வீணாகத் திரிகிறாய் மனமே! கங்கை நதி திருமாலின் திருவடியிலிருந்து தோன்றிற்று ஸ்ரீ ரங்கநாதனைத் தரிசித்து காவேரி விளங்கிற்று இராம பிரானை பக்தியுடன் துதிபாடும் தியாகராஜனின் விண்ணப்பத்தை செவி சாய்த்துக் கேள். ஸ்ரீராமனை தரிசித்துக் கொண்டிருந்தால் யோகநிலை தானே சித்திக்கும் என்பதே இந்த கீர்த்தனையின் பொருள். நாமும் அவன் நாமத்தையும் வடிவத்தையும் மனதில் நினைத்து பழக நம் மனதை பழக்கப்படுத்துவோம். Posted by Sri Pattabi Raman (vijayakoti33@gmail.com)
|
|