Post by jksivan on Dec 17, 2013 7:09:03 GMT 5.5
மார்கழி 6வது நாள்.
ஆயர்பாடியில் விடியற்காலை, குளிர் ஊசியாய் மேலே குளிர் கீற்றுகளை வீச, சிறுமிகள் சிலர் மட்டும் ஆண்டாளின் எதிரில் நிற்கின்றனர்.
''என் ஆசை தோழியரே, இன்று மார்கழி மாசம் பிறந்து 6வது நாளல்லவா? என்னடி நீங்க ரெண்டேபேர் மட்டும், நிறைய பேரை காணோம்? வாங்க, நாம போய் அவங்களை எல்லாம் எழுப்பி கூட்டி வருவோம். ஒவ்வொரு கதவா தட்டுவோம்.
''
ஒவ்வொரு வீட்டுக்கதவும் தட்டப்படுகிறது. ஆண்டாள் கதவின் வெளியே இருந்து குரல் கொடுக்கிறாள்.
“என்னடி இன்னும் தூக்கம் எழுந்திருங்கோ. பெருமாள் கோவில் சங்கு ஊதறது கூட
கேக்கலையா?
குழந்தையா இருந்தபோது விஷப்பால் ஊட்ட முயன்றவளை கொன்றவன், சகடாசுரன், காளிங்கனை எல்லாம் அழித்தவன், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டவன் அப்படிப் பட்டவனை
ரிஷிகள் எல்லாம் ஹரி ஹரி என்று ஸ்மரிக்கிரார்களே!” அது கூடவா காதிலே விழலை?
நாங்க கதவை தட்டுற தட்டிலேஅவனே எழுந்து விடுவான் போலிருக்கிறதே? சீக்கிரம் எழுந்து வந்தா தான் நாம் குளிச்சு நம்ப நோன்பை ஆரம்பிக்க முடியும்.
''
"ஆண்டாள், ரொம்ப ஆவலா இருக்குடி, நீ இன்னிக்கி என்ன சொல்லித் தரப்போறே?"
''இன்று நான் உங்களுக்கு என்ன சொல்லட்டும்? எல்லோரும் யமுனையில் நீராடி விரதமிருக்கிறோமே, இருக்கிறவா அதை முதலில் முடிப்போம். மீதியை அவர்களும் வரட்டும் நாளைக்கு சொல்கிறேன்
''
++
(வில்லிப்புத்தூரில் )
''இன்னிக்கு உன்னோட பாசுரம் ரொம்ப அசாத்யமா அமைஞ்சுட்டுது கொழந்தே. நேரே கண்ணாலே பார்க்கறா மாதிரி வர்ணனை பண்ணியிருக்கே. எனக்கு ஆயர்பாடியிலேயே இருந்துட மாட்டோமா என்று தோணறது . எங்கே இந்த ஆறாம் நாள் பாசுரத்தை இன்னொரு தரம் வாசி.''
''புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
''
கண்களில் நீர் ஆறாக பெருக வெறுமே தலையை மட்டும் அசைத்துக்கொண்டிருந்தார் பெரியாழ்வார். இரு கைகளும் தலைக்குமேல் கூப்பியிருந்தன.
''இந்த பாசுரத்திலே அப்படி என்னப்பா அர்த்தம் தோணறது உங்களுக்கு?''
''அம்மா கோதை, அந்த ஆயர்பாய் குழந்தை ஆண்டாள் எவ்வளோ பக்தி ஸ்ரத்தையோடு மற்ற குழந்தைகளோடு க்ரிஷ்ணனைப்பத்தி பாடறா பாத்தியா?
தனக்காக இல்லாமல், பிறர்க்காக அந்த பரமனை துதி பாடறது அற்புதம்.எல்லோரையும் எழுப்பி நற்கதிக்கு வழிகாட்டுகிறதே தார்மிக குணம். பொழுது விடிஞ்சுட்டதா? என்று அந்த பெண்கள் கேட்பது போலேயும், என்ன சந்தேகம், இதோ பார் பறவைகள் இறக்கி அடித்துக்கொண்டும் இனிய சப்தங்களுடனும் கிளம்பிவிட்டன. வண்டுகள் ரீங்காரம் பன்னத்துவங்கின. ஆலயத்தில் சங்க நாதம் கேட்கிறது. '' ஹே ஆதிமூலே என்றலறிய கஜேந்திரனுக்கு கருடவாகனனாய் விரைந்து காலைப்பிடித்த முதலையை சக்ராயுதத்தால் அழித்த பரமன் நமக்கும் உதவுவான். அருள்வான் என்கிற வாக்கும் இணையற்றது ஹரி ஹரி என்கிற நாமம் ரிஷிகளாலும் யோகிகளாலும் மற்றோராலும் முழங்கப்படுகிறதே. கிருஷ்ணன் சம்ஹாரம் செய்த பூதகியையும் சகடாசுரனையும் நினைக்கிறாள் ஆண்டாள். குழந்தை கண்ணன் தன்னையா காத்துக்கொண்டான். அல்ல. அவர்களை அழித்ததன் மூலம் நம்மை காத்தான். எழுந்திருங்கள் யமுனா ஸ்னானத்திற்கு.-- நேரே நடப்பது போல் கற்பனை பண்ணியிருக்கிறே குழந்தே.''
உன்னாலே இதை எப்படி எழுத முடிந்தது தெரியுமா? நீ தான் அந்த ஆயர்பாடி குழந்தை ஆண்டாள் அம்மா.
''
ஆயர்பாடியில் விடியற்காலை, குளிர் ஊசியாய் மேலே குளிர் கீற்றுகளை வீச, சிறுமிகள் சிலர் மட்டும் ஆண்டாளின் எதிரில் நிற்கின்றனர்.
''என் ஆசை தோழியரே, இன்று மார்கழி மாசம் பிறந்து 6வது நாளல்லவா? என்னடி நீங்க ரெண்டேபேர் மட்டும், நிறைய பேரை காணோம்? வாங்க, நாம போய் அவங்களை எல்லாம் எழுப்பி கூட்டி வருவோம். ஒவ்வொரு கதவா தட்டுவோம்.
''
ஒவ்வொரு வீட்டுக்கதவும் தட்டப்படுகிறது. ஆண்டாள் கதவின் வெளியே இருந்து குரல் கொடுக்கிறாள்.
“என்னடி இன்னும் தூக்கம் எழுந்திருங்கோ. பெருமாள் கோவில் சங்கு ஊதறது கூட
கேக்கலையா?
குழந்தையா இருந்தபோது விஷப்பால் ஊட்ட முயன்றவளை கொன்றவன், சகடாசுரன், காளிங்கனை எல்லாம் அழித்தவன், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டவன் அப்படிப் பட்டவனை
ரிஷிகள் எல்லாம் ஹரி ஹரி என்று ஸ்மரிக்கிரார்களே!” அது கூடவா காதிலே விழலை?
நாங்க கதவை தட்டுற தட்டிலேஅவனே எழுந்து விடுவான் போலிருக்கிறதே? சீக்கிரம் எழுந்து வந்தா தான் நாம் குளிச்சு நம்ப நோன்பை ஆரம்பிக்க முடியும்.
''
"ஆண்டாள், ரொம்ப ஆவலா இருக்குடி, நீ இன்னிக்கி என்ன சொல்லித் தரப்போறே?"
''இன்று நான் உங்களுக்கு என்ன சொல்லட்டும்? எல்லோரும் யமுனையில் நீராடி விரதமிருக்கிறோமே, இருக்கிறவா அதை முதலில் முடிப்போம். மீதியை அவர்களும் வரட்டும் நாளைக்கு சொல்கிறேன்
''
++
(வில்லிப்புத்தூரில் )
''இன்னிக்கு உன்னோட பாசுரம் ரொம்ப அசாத்யமா அமைஞ்சுட்டுது கொழந்தே. நேரே கண்ணாலே பார்க்கறா மாதிரி வர்ணனை பண்ணியிருக்கே. எனக்கு ஆயர்பாடியிலேயே இருந்துட மாட்டோமா என்று தோணறது . எங்கே இந்த ஆறாம் நாள் பாசுரத்தை இன்னொரு தரம் வாசி.''
''புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
''
கண்களில் நீர் ஆறாக பெருக வெறுமே தலையை மட்டும் அசைத்துக்கொண்டிருந்தார் பெரியாழ்வார். இரு கைகளும் தலைக்குமேல் கூப்பியிருந்தன.
''இந்த பாசுரத்திலே அப்படி என்னப்பா அர்த்தம் தோணறது உங்களுக்கு?''
''அம்மா கோதை, அந்த ஆயர்பாய் குழந்தை ஆண்டாள் எவ்வளோ பக்தி ஸ்ரத்தையோடு மற்ற குழந்தைகளோடு க்ரிஷ்ணனைப்பத்தி பாடறா பாத்தியா?
தனக்காக இல்லாமல், பிறர்க்காக அந்த பரமனை துதி பாடறது அற்புதம்.எல்லோரையும் எழுப்பி நற்கதிக்கு வழிகாட்டுகிறதே தார்மிக குணம். பொழுது விடிஞ்சுட்டதா? என்று அந்த பெண்கள் கேட்பது போலேயும், என்ன சந்தேகம், இதோ பார் பறவைகள் இறக்கி அடித்துக்கொண்டும் இனிய சப்தங்களுடனும் கிளம்பிவிட்டன. வண்டுகள் ரீங்காரம் பன்னத்துவங்கின. ஆலயத்தில் சங்க நாதம் கேட்கிறது. '' ஹே ஆதிமூலே என்றலறிய கஜேந்திரனுக்கு கருடவாகனனாய் விரைந்து காலைப்பிடித்த முதலையை சக்ராயுதத்தால் அழித்த பரமன் நமக்கும் உதவுவான். அருள்வான் என்கிற வாக்கும் இணையற்றது ஹரி ஹரி என்கிற நாமம் ரிஷிகளாலும் யோகிகளாலும் மற்றோராலும் முழங்கப்படுகிறதே. கிருஷ்ணன் சம்ஹாரம் செய்த பூதகியையும் சகடாசுரனையும் நினைக்கிறாள் ஆண்டாள். குழந்தை கண்ணன் தன்னையா காத்துக்கொண்டான். அல்ல. அவர்களை அழித்ததன் மூலம் நம்மை காத்தான். எழுந்திருங்கள் யமுனா ஸ்னானத்திற்கு.-- நேரே நடப்பது போல் கற்பனை பண்ணியிருக்கிறே குழந்தே.''
உன்னாலே இதை எப்படி எழுத முடிந்தது தெரியுமா? நீ தான் அந்த ஆயர்பாடி குழந்தை ஆண்டாள் அம்மா.
''