Post by jksivan on Dec 17, 2013 6:42:28 GMT 5.5
மார்கழி 3ம் நாள்
வில்லிப்புத்தூர் உறங்கிக்கொண்டிருக்க அந்த சிறிய ஆஸ்ரமம் மட்டும் தீபத்தின் ஒளியை சிறிதாக வெளியே கசிய விட்டுக்கொண்டிருந்தது. காற்று என்னவோ அன்று கொஞ்சம் பலமாகத்தான் வீசியது. மரங்கள் செடி கொடிகள் சல சல என்ற சப்தத்தில் ஒலித்துகொண்டு தலையாட்டின.
''ராத்ரி முழுக்க தூக்கம் வரவில்லையம்மா''
'' ஏன் பா?''
''இன்னிக்கு என்ன பாசுரம் எழுதப்போறே, அதைக் கேக்கவேண்டும் என்கிற ஆவல், எப்போ பொழுது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தேன் தாயே. அந்த ஜெகன்னாதனைப் பத்தி இன்னிக்கு என்னமா எழுதப்போறே என்கிற ஆவல் தான்.''
'''அப்பா இன்னிக்கு எழுதவேண்டியதை ராத்திரியே முடிவு பண்ணி எழுதி வைச்சுட்டேன். இதோ வாசல் அலம்பி கோலம் போட்டுட்டு வந்து படிக்கிறேன்.''
விளக்கைத் தூண்டி விட்டு அவள் எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு விஷ்ணு சித்தர் கோதைக்காக காத்திருந்தார். நாமும் காத்திருப்போம்.
கோதை அமர்ந்தாள். '' பாடும்மா, உன் குரல்லே கேட்கும்போது காதுக்கு கர்ணாம்ருதமா இருக்கும்மா ''
அவள் தேனினும் இனிய குரலில் முழுப்பாசுரமும் பாடினாள்
'' ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.''
விஷ்ணு சித்தர் ஆனந்த பாஷ்பம் நிறைந்து கண்களில் வழிய தழு தழுத்த குரலில் ''கோதை , என் கண்ணே, என்ன அருமை, என்ன கற்பனையடி உனக்கு, அபூர்வம் அபூர்வம் '' என்னும்போது ஆண்டாளின் காதில் அவை விழவில்லை. நேரே பார்த்துக்கொண்டு சிலை போல் அமர்ந்திருந்தாலும் அவள் ஆயர்பாடியில் தான் இருந்தாள் .
+++++
'' அப்படியென்ன அந்த நாராயணன் பெரியவன். சொல்றேன், என்று சொல்லிவிட்டு நீ போய்விட்டாய். நீ சொல்வதெல்லாம் எங்களுக்கு புதிதாக சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் உள்ளது. இந்த மழையில் நனைந்துகொண்டே நாம் ஆற்றுக்கு போவதற்குள் சொல்லேன். கேட்டுக்கொண்டே போவோம். ஆண்டாளின் வாயை பிடுங்கி அவள் தோழிகள் என்ன தெரிந்து கொண்டனர்:
"ஆமாம். அந்த நாராயணன் ரொம்ப பெரியவனாயிருந்ததால் தான் இந்த உலகம், மேல் உலகம், ரெண்டையுமே, ரெண்டு கால் அடி வைச்சு அளந்தவன், மூணாவது அடி மண்ணுக்கு கால் எங்க வைக்கறதுன்னு மஹாபலி ராஜா தலையிலேயே வைச்சான்னு பாட்டி கதை சொல்வாளே. அதனாலே தான் அவ்வளவு பெரிய அவன் அருளணும்னு நாம் இந்த நோன்பு விரதமெல்லாம் இருக்க போகிறோம். நம்ப விரதத்தாலே நிறைய மழை பெய்யும், பசு வெல்லாம், நிறைய பால் வெள்ளமா கொடுக்கும். விளைச்சல் நல்லா இருக்கும். நாடு செழிச்சா நமக்கு சுபிட்சம் தானே. சுபிட்சம் இருந்தா திருடு, கொள்ளை,கொலை எதுவுமே இருக்காது எல்லார் கிட்டயும் பணம் நிறைய இருந்தால் ஏன் இன்னொருத்தர் கிட்ட திருடணும்''
''ஆமாண்டி, நீ சொல்றது வாஸ்தவம் தான். நாம் எல்லாம் அன்பா சந்தோஷமா இருப்போம். அது தான் அந்த நாராயணன் விரும்பறது. மழையில் நனையும்போது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் நிறைய மழை இருந்தா தான் விளைச்சல் வரும். நாடு சுபிக்ஷமா இருக்கும். பல நாள் சுகத்துக்கு சில நாள் கஷ்டப்படறது நல்லதுக்கு தானே. மழையில் நனைந்துகொண்டே ஆற்றிலும் மூழ்கி குளிர் நீரில் நீராடினர் அந்த பெண்கள். நாராயணனை வேண்டிக்கொண்டே பாடினர், வீதி வலம் முடிந்து தத்தம் வீடு சென்று விரதம் இருந்தனர். மறுநாள் காலைக்கும் ஆண்டாளுக்கும் காத்திருந்தனர்.
++
குறைந்தது ஒரு பத்து தடவையாவது விஷ்ணு சித்தர் அந்த பாசுரத்தை பாடி அதன் உள்ளர்த்தத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.
''நாராயணா இந்த புவனம் நீ படைத்தது. விஷ்ணுவின் படைப்பு. அதில் நீ படைத்த எதுவுமே எவருமே நீ. வைஷ்ணவர்கள் யார்? உன் அம்சம். இந்த உலகம் நமக்கு சந்தோஷத்தை தருவதற்கு என்பது தவிர அதில் எதுவும் நமதல்ல. பூங்காவில் உள்ள புஷ்பங்கள் நமக்கு தூரத்திலிருந்து பார்த்து சந்தோஷம் தருவதற்கே தவிர பறித்து நமக்கென்று வைத்துக்கொல்வதற்கில்லை. சகல ஐஸ்வர்யங்களும் வேண்டவே வேண்டாம். அவை உனது. எங்களுக்கு வேண்டியது நீயும் உனது பாத கமல தரிசனமும் தான். 'ஆண்டாள் அந்த அறியா சிறுமிகள் வாயிலாக மூவுலகும் அளந்த அந்த திரிவிக்ரமன் மகத்தை உணர்த்தி எல்லாம் அவனே, அவனதே என்பதை உணர்த்திவிட்டாள் .'' உத்தமன் பேர் பாடி என்று எவ்வளவு பொருத்தமாக அந்த திவ்ய அஷ்டாக்ஷர மந்த்ரோபதேசம் செய்கிறாள்.'' அவன் பேர் சொன்னாலே போதுமே. ''ஆபத் பாந்தவா, கோவிந்தா என்ற திரௌபதிக்கு அந்த கிருஷ்ணன் எப்படி உடனே வந்து உதவினான்''
பொழுது புலர்ந்து விட்டது. மழையும் சற்று நின்றது. எண்ணத்தொடர் சற்று நந்தவனத்தில் பூத்துக் குலுங்கிய மலர்களின் மேல் செல்ல பெரியாழ்வார் நாராயணா என்னே உன் கருணை '' என்று பூக்குடலை யுடன் நந்தவனத்தில் நுழைந்தார்.
வில்லிப்புத்தூர் உறங்கிக்கொண்டிருக்க அந்த சிறிய ஆஸ்ரமம் மட்டும் தீபத்தின் ஒளியை சிறிதாக வெளியே கசிய விட்டுக்கொண்டிருந்தது. காற்று என்னவோ அன்று கொஞ்சம் பலமாகத்தான் வீசியது. மரங்கள் செடி கொடிகள் சல சல என்ற சப்தத்தில் ஒலித்துகொண்டு தலையாட்டின.
''ராத்ரி முழுக்க தூக்கம் வரவில்லையம்மா''
'' ஏன் பா?''
''இன்னிக்கு என்ன பாசுரம் எழுதப்போறே, அதைக் கேக்கவேண்டும் என்கிற ஆவல், எப்போ பொழுது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தேன் தாயே. அந்த ஜெகன்னாதனைப் பத்தி இன்னிக்கு என்னமா எழுதப்போறே என்கிற ஆவல் தான்.''
'''அப்பா இன்னிக்கு எழுதவேண்டியதை ராத்திரியே முடிவு பண்ணி எழுதி வைச்சுட்டேன். இதோ வாசல் அலம்பி கோலம் போட்டுட்டு வந்து படிக்கிறேன்.''
விளக்கைத் தூண்டி விட்டு அவள் எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு விஷ்ணு சித்தர் கோதைக்காக காத்திருந்தார். நாமும் காத்திருப்போம்.
கோதை அமர்ந்தாள். '' பாடும்மா, உன் குரல்லே கேட்கும்போது காதுக்கு கர்ணாம்ருதமா இருக்கும்மா ''
அவள் தேனினும் இனிய குரலில் முழுப்பாசுரமும் பாடினாள்
'' ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.''
விஷ்ணு சித்தர் ஆனந்த பாஷ்பம் நிறைந்து கண்களில் வழிய தழு தழுத்த குரலில் ''கோதை , என் கண்ணே, என்ன அருமை, என்ன கற்பனையடி உனக்கு, அபூர்வம் அபூர்வம் '' என்னும்போது ஆண்டாளின் காதில் அவை விழவில்லை. நேரே பார்த்துக்கொண்டு சிலை போல் அமர்ந்திருந்தாலும் அவள் ஆயர்பாடியில் தான் இருந்தாள் .
+++++
'' அப்படியென்ன அந்த நாராயணன் பெரியவன். சொல்றேன், என்று சொல்லிவிட்டு நீ போய்விட்டாய். நீ சொல்வதெல்லாம் எங்களுக்கு புதிதாக சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் உள்ளது. இந்த மழையில் நனைந்துகொண்டே நாம் ஆற்றுக்கு போவதற்குள் சொல்லேன். கேட்டுக்கொண்டே போவோம். ஆண்டாளின் வாயை பிடுங்கி அவள் தோழிகள் என்ன தெரிந்து கொண்டனர்:
"ஆமாம். அந்த நாராயணன் ரொம்ப பெரியவனாயிருந்ததால் தான் இந்த உலகம், மேல் உலகம், ரெண்டையுமே, ரெண்டு கால் அடி வைச்சு அளந்தவன், மூணாவது அடி மண்ணுக்கு கால் எங்க வைக்கறதுன்னு மஹாபலி ராஜா தலையிலேயே வைச்சான்னு பாட்டி கதை சொல்வாளே. அதனாலே தான் அவ்வளவு பெரிய அவன் அருளணும்னு நாம் இந்த நோன்பு விரதமெல்லாம் இருக்க போகிறோம். நம்ப விரதத்தாலே நிறைய மழை பெய்யும், பசு வெல்லாம், நிறைய பால் வெள்ளமா கொடுக்கும். விளைச்சல் நல்லா இருக்கும். நாடு செழிச்சா நமக்கு சுபிட்சம் தானே. சுபிட்சம் இருந்தா திருடு, கொள்ளை,கொலை எதுவுமே இருக்காது எல்லார் கிட்டயும் பணம் நிறைய இருந்தால் ஏன் இன்னொருத்தர் கிட்ட திருடணும்''
''ஆமாண்டி, நீ சொல்றது வாஸ்தவம் தான். நாம் எல்லாம் அன்பா சந்தோஷமா இருப்போம். அது தான் அந்த நாராயணன் விரும்பறது. மழையில் நனையும்போது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் நிறைய மழை இருந்தா தான் விளைச்சல் வரும். நாடு சுபிக்ஷமா இருக்கும். பல நாள் சுகத்துக்கு சில நாள் கஷ்டப்படறது நல்லதுக்கு தானே. மழையில் நனைந்துகொண்டே ஆற்றிலும் மூழ்கி குளிர் நீரில் நீராடினர் அந்த பெண்கள். நாராயணனை வேண்டிக்கொண்டே பாடினர், வீதி வலம் முடிந்து தத்தம் வீடு சென்று விரதம் இருந்தனர். மறுநாள் காலைக்கும் ஆண்டாளுக்கும் காத்திருந்தனர்.
++
குறைந்தது ஒரு பத்து தடவையாவது விஷ்ணு சித்தர் அந்த பாசுரத்தை பாடி அதன் உள்ளர்த்தத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.
''நாராயணா இந்த புவனம் நீ படைத்தது. விஷ்ணுவின் படைப்பு. அதில் நீ படைத்த எதுவுமே எவருமே நீ. வைஷ்ணவர்கள் யார்? உன் அம்சம். இந்த உலகம் நமக்கு சந்தோஷத்தை தருவதற்கு என்பது தவிர அதில் எதுவும் நமதல்ல. பூங்காவில் உள்ள புஷ்பங்கள் நமக்கு தூரத்திலிருந்து பார்த்து சந்தோஷம் தருவதற்கே தவிர பறித்து நமக்கென்று வைத்துக்கொல்வதற்கில்லை. சகல ஐஸ்வர்யங்களும் வேண்டவே வேண்டாம். அவை உனது. எங்களுக்கு வேண்டியது நீயும் உனது பாத கமல தரிசனமும் தான். 'ஆண்டாள் அந்த அறியா சிறுமிகள் வாயிலாக மூவுலகும் அளந்த அந்த திரிவிக்ரமன் மகத்தை உணர்த்தி எல்லாம் அவனே, அவனதே என்பதை உணர்த்திவிட்டாள் .'' உத்தமன் பேர் பாடி என்று எவ்வளவு பொருத்தமாக அந்த திவ்ய அஷ்டாக்ஷர மந்த்ரோபதேசம் செய்கிறாள்.'' அவன் பேர் சொன்னாலே போதுமே. ''ஆபத் பாந்தவா, கோவிந்தா என்ற திரௌபதிக்கு அந்த கிருஷ்ணன் எப்படி உடனே வந்து உதவினான்''
பொழுது புலர்ந்து விட்டது. மழையும் சற்று நின்றது. எண்ணத்தொடர் சற்று நந்தவனத்தில் பூத்துக் குலுங்கிய மலர்களின் மேல் செல்ல பெரியாழ்வார் நாராயணா என்னே உன் கருணை '' என்று பூக்குடலை யுடன் நந்தவனத்தில் நுழைந்தார்.