Post by jksivan on Dec 6, 2013 4:43:56 GMT 5.5
மார்கழி 1ம் நாள் ''
''ஏம்மா குழந்தை வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்துட்டே.? உன்னுடைய திவ்ய குரல்லே நீ பாசுரங்கள் பாடும்போது என்னை ஸ்ரீ வைகுண்டத்துக்கே கொண்டு சேர்க்கிறதம்மா''.
விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார் குரல் தழுதழுத்தது.
''அப்பா. எல்லாம் நீங்க கத்துக் கொடுத்தது தானே. எனக்கு நீங்க இல்லாட்டா இதெல்லாம் வருமா அப்பா. அரங்கனை அறிமுகப்படுத்தியதே நீங்கதானே. காரணமே நீங்க தானே. என் ரங்கனை பத்தி பாட தோண வச்சதே நீங்க தானேப்பா?
''ஆமாம் தாயே, நான் செஞ்ச பெரிய பாக்கியம் உன்னை அடைந்தது. உன் மூலமா அந்த ரங்கனை நினைக்கிறது, அவனைப் பத்தி பேசறது, பாடறது எல்லாம். இப்படியே என் வாழ்நாள் பூரா போகணும்னு தோணறது அம்மா. இப்பல்லாம் நீயே எழுத்தாணி பிடிச்சு ஓலைச்சுவட்டிலே நிறைய எழுத ஆரம்பிச்சுட்டே. ரொம்ப சந்தோஷம் தாங்கலை எனக்கு.''
'' நிறைய எழுத மனது துடிக்கிறது அப்பா. ஒண்ணை நினைச்சு எழுதறத்துக்குள்ளே அதைக்காட்டிலும் அருமையா வேறே ஒண்ணு மனசுக்குள்ளே ஒடரதாலே முதல்லே நானே அதை பாடிப்பார்த்து அனுபவிச்சுக்கிறேன்.''
' ஏன் எழுந்துட்டே ன்னு கேட்டேளே. வாசலைப் போய் பாருங்கோ, பெருக்கி, சாணம் தெளிச்சு,மெழுகி, பூ செருகி பெரிய கோலம் போட்டிருக்கேன், '' ரங்கா வா'' என்றும் எழுதி இருக்கேன்''
''மார்கழி மாசம். பிரம்ம முகூர்த்தத்திலே சகல தெய்வங்களும் பூமிக்கு வரா அம்மா. நீ வான்னு எழுதி கூப்பிடறத்துக்கு முன்னாலே உன் குரல் கேட்டே ஓடி வருவான், அந்த ரங்கன், எனக்கு தெரியாதா? நீ என்ன புதுசா பாடினே?''
''அப்பா, மார்கழிலேவிடியறதுக்கு முன்னே எழுந்து நீராடி விரத மிருந்து முப்பது நாளும் அந்த நாராயணனையே நினைத்து நோன்பு நோற்றால் அந்த ரங்கன் வேண்டியதை தருவான் என்கிறதாலே எனக்கு அவனே வேண்டுமென்றே இந்த முப்பதுநாளும் நோன்பு நோக்கறேன். அந்த மாய கிருஷ்ணன் இருந்த ஆயர்பாடியிலேயே நான் இருக்கிறதா மனசாலே அங்கே போய் மீதி பெண்களோடு சேர்ந்து கொண்டு அவர்களில் நானும் ஒருத்தியா அங்கே ஒரு ஆண்டாள் ஆகிட்டேன் பா. நான் உடம்பிலே இங்க இருந்தாலும் மனத்திலே கிருஷ்ணன் வீட்டையே சுத்திசுத்தி வரது தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கு அப்பா. ''
''என்ன எழுதினே படியேன் கேக்கறேன். கண்ணு சரியா தெரியலை. ஓலைச்சுவடு படிக்க வெளிச்சம் போறலே.''
++++
கோதை ஆயர்பாடி ஆண்டாள் ஆகிவிட்டாள் மார்கழி மாதம் குளிர். யமுனை உறங்குவது போல் அமைதியாக இருக்கிறது. அதை எழுப்புகிறாள் ஆண்டாள். முதலில் தூக்கம் கலைந்து எழுந்தவள் தன குடிலை விட்டு வெளியே வந்தாள்
‘’மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். ‘’
கணீரென்று கோதையின் குரலில் திருப்பாவை தோன்றியது. விஷ்ணு சித்தர் கண்களில் நீர் மாலை.
'''அசாத்யம், ஸ்ரீயப்பதே, ரங்கநாதா, எல்லாம் உன் கிருபை. என்ன அற்புதம் இந்தக் குழந்தையின் பக்தி ச்ரத்தை. இவ்வளவு காலம் நான் எழுதியதெல்லாம் இந்த ஒரு பாசுரத்துக்கு அம்மா தாயே,
கோதை, நீ லக்ஷ்மி அம்சம் என்பதில் சந்தேகமே. என்ன திவ்யமாக எழுதியிருக்கிறாய். நான் எழுதினத்துக்கேல்லாம் சிகரமாக உன் எழுத்தில் மிளிர்கிறதே. எல்லாம் அந்த ரங்கன் செயல்.
நாளைக்கு நீ எழுதப்போவதையும் ஆவலாக கேட்க காத்திருக்கேன்.
''ஓவ்வொரு நாளும் பாசுரம் எழுதப்போறேன். நீங்க எனக்கு அறிமுகப்படுத்திய அந்த நாராயணன் அவதாரமான கிருஷ்ணன் இருந்த ஆயர்பாடியிலே இடைச்சிறுமிகள் ஒன்றாககூடி யமுனையில் நீராடி நல்ல கணவன் கிடைக்க காத்யாயனி விரதம் இருந்த நோன்பு பற்றியும் எழுதப்போகிறேன்.
+++
வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தரை விட்டுவிட்டு ஆயர்பாடிக்கு செல்கிறோமே அங்கு சில பெண்கள் விடியற்காலையில் கூடியிருக்கிறார்கள். மற்றும் சிலரை எழுப்ப செல்கிறாள் ஆண்டாள் என்கிற சிறுமி. '
''மார்கழி வந்து விட்டதே. எழுந்திருக்க வேண்டாமா. நாம் எல்லாருமாக யமுனைக்கு செல்வோம். அங்கு புனித நீராடி ஸ்ரீ கிருஷ்ணனைப் பணிவோம். அவன் ஒருவன் போதுமே நாம் கேட்டதெல்லாம் அருள.தோழியர்களே எழுந்திருங்கள்.
''என்னடி ஆண்டாள் , இந்த மார்கழி குளிரில் அதிகாலையில் வந்து எங்களை எழுப்பி வா குளிப்போம், பாடுவோம் என்கிறாய். எதற்கு ஏன் என்கிற விஷயம் சொல்லேன்?என்றனர் அந்த ஆயர்பாடி சிறுமியர்
அவளிடம். அவள் சொன்னாள்:
''நான் சொல்றேன் ஆனால்ஒரு நாளைக்கு ஒரு விஷயம் தான் சொல்வேன். அப்போதான்உங்களுக்கு கொஞ்ம் கொஞ்சமா புரியும். ஒரே அடியா ஒரு மாச விஷயத்தை ஒரே நாளில் சொல்லித் திணிக்கக் கூடாது.
இன்னிக்கு மார்கழி 1ம் நாள் ஆண்டாள் என்கிற சிறுமி சொல்ற விஷயம்இது:
"இந்த மார்கழி என்கிற மாசம் ரொம்ப ஒசத்தியானது.எனக்கென்னமோஇந்த மாதம் தான் ரொம்ப பிடிக்கும். வெயில் கிடையாது.
தண்ணீருக்கு பஞ்சமில்லை. இந்த ஊர் என் உயிர். ஏன் என்றால் இதில் தான் கிருஷ்ணன், அந்த ஆண்அழகன் கருநீல வண்ணன் செவ்விதழ், கன்னம் உடையவன்-கண்களோ செந்தாமரை அவன் இருக்கும் நம்முடைய இந்த ஆயர்பாடி, ஒரு ஸ்வர்க பூமி என்பதில் என்ன சந்தேகமடி உங்களுக்கு!!. அவன் சாதாரணமானவனா யிருந்தால் இந்த பேச்சுக்கே இடமிலையே! எதிர்த்தவர்களின்உயிர் குடிக்கும் வீரன் அந்த நந்த கோபனின் பிள்ளையை தவிர வேறு யார்? அவன் தாய் பற்றி சொல்லவில்லையே, இந்த சிங்கக்குட்டியை பெற கொடுத்து வைத்தவள் அவள். யசோதை அவள் பேர்.
''நேரமாச்சே சீக்கிரம் வாருங்கள் தோழியரே, குளிர்ந்த யமுனையில் குளித்து அவனை பாடுவோம்,
''ஆண்டாள் கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன் அப்படி என்ன இதுக்குமுக்கியம்?'' எதற்காக இந்த மார்கழி மாதம் நோன்பு என்று தெரியணும்னாக்க, இந்த மாசம்தான் அந்த கிருஷ்ணனுக்கு, நாராயணனுக்கு பிடிச்ச மாசம். மாதங்களில் அவன் மார்கழியாகவே இருக்கானாம். நாமெல்லோரும் ஏன் இந்த உலகில் எவருமே ஸ்வர்கமடைய நாம் செய்யும் இந்த பாவை நோன்பு தவிர குறுக்கு
வழி வேறே இல்லை அல்லவா?
பெண்கள் ஸ்நானம் முடித்து கூட்டமாக சேர்ந்து நாராயணனை நெக்குருகி, மனமுருகிப்பாடி , வெள்ளை உள்ளத்தோடு வேண்டி அன்றைய நோன்பைத்தொடங்கினர். பிறகு தத்தம் வீடு திரும்பினர். மார்கழி மாதம் நம்அனைவராலும் ஸ்ரீ வில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை
தரிசனம் செய்ய இயலுமா? சென்னை வாசிகளே! திருவல்லிக் கேணி தான் சென்னையின் வில்லிப்புத்தூர். அங்கு மார்கழி முழுதும் கோலாகலமாக விமரிசையாக ஆண்டாள் நீராட்டு விழா, பிரபந்த பாசுரம் எதிரொலிக்க, விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் திவ்யதரிசனம் கிடைக்கிறதே, விடாமல் போவோம். நம்மால் முடிந்த நோன்பு இதையாவது செய்வோமே. கிளம்புங்கள் எல்லோரும் உடனே போவோம்
''ஏம்மா குழந்தை வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்துட்டே.? உன்னுடைய திவ்ய குரல்லே நீ பாசுரங்கள் பாடும்போது என்னை ஸ்ரீ வைகுண்டத்துக்கே கொண்டு சேர்க்கிறதம்மா''.
விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார் குரல் தழுதழுத்தது.
''அப்பா. எல்லாம் நீங்க கத்துக் கொடுத்தது தானே. எனக்கு நீங்க இல்லாட்டா இதெல்லாம் வருமா அப்பா. அரங்கனை அறிமுகப்படுத்தியதே நீங்கதானே. காரணமே நீங்க தானே. என் ரங்கனை பத்தி பாட தோண வச்சதே நீங்க தானேப்பா?
''ஆமாம் தாயே, நான் செஞ்ச பெரிய பாக்கியம் உன்னை அடைந்தது. உன் மூலமா அந்த ரங்கனை நினைக்கிறது, அவனைப் பத்தி பேசறது, பாடறது எல்லாம். இப்படியே என் வாழ்நாள் பூரா போகணும்னு தோணறது அம்மா. இப்பல்லாம் நீயே எழுத்தாணி பிடிச்சு ஓலைச்சுவட்டிலே நிறைய எழுத ஆரம்பிச்சுட்டே. ரொம்ப சந்தோஷம் தாங்கலை எனக்கு.''
'' நிறைய எழுத மனது துடிக்கிறது அப்பா. ஒண்ணை நினைச்சு எழுதறத்துக்குள்ளே அதைக்காட்டிலும் அருமையா வேறே ஒண்ணு மனசுக்குள்ளே ஒடரதாலே முதல்லே நானே அதை பாடிப்பார்த்து அனுபவிச்சுக்கிறேன்.''
' ஏன் எழுந்துட்டே ன்னு கேட்டேளே. வாசலைப் போய் பாருங்கோ, பெருக்கி, சாணம் தெளிச்சு,மெழுகி, பூ செருகி பெரிய கோலம் போட்டிருக்கேன், '' ரங்கா வா'' என்றும் எழுதி இருக்கேன்''
''மார்கழி மாசம். பிரம்ம முகூர்த்தத்திலே சகல தெய்வங்களும் பூமிக்கு வரா அம்மா. நீ வான்னு எழுதி கூப்பிடறத்துக்கு முன்னாலே உன் குரல் கேட்டே ஓடி வருவான், அந்த ரங்கன், எனக்கு தெரியாதா? நீ என்ன புதுசா பாடினே?''
''அப்பா, மார்கழிலேவிடியறதுக்கு முன்னே எழுந்து நீராடி விரத மிருந்து முப்பது நாளும் அந்த நாராயணனையே நினைத்து நோன்பு நோற்றால் அந்த ரங்கன் வேண்டியதை தருவான் என்கிறதாலே எனக்கு அவனே வேண்டுமென்றே இந்த முப்பதுநாளும் நோன்பு நோக்கறேன். அந்த மாய கிருஷ்ணன் இருந்த ஆயர்பாடியிலேயே நான் இருக்கிறதா மனசாலே அங்கே போய் மீதி பெண்களோடு சேர்ந்து கொண்டு அவர்களில் நானும் ஒருத்தியா அங்கே ஒரு ஆண்டாள் ஆகிட்டேன் பா. நான் உடம்பிலே இங்க இருந்தாலும் மனத்திலே கிருஷ்ணன் வீட்டையே சுத்திசுத்தி வரது தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கு அப்பா. ''
''என்ன எழுதினே படியேன் கேக்கறேன். கண்ணு சரியா தெரியலை. ஓலைச்சுவடு படிக்க வெளிச்சம் போறலே.''
++++
கோதை ஆயர்பாடி ஆண்டாள் ஆகிவிட்டாள் மார்கழி மாதம் குளிர். யமுனை உறங்குவது போல் அமைதியாக இருக்கிறது. அதை எழுப்புகிறாள் ஆண்டாள். முதலில் தூக்கம் கலைந்து எழுந்தவள் தன குடிலை விட்டு வெளியே வந்தாள்
‘’மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். ‘’
கணீரென்று கோதையின் குரலில் திருப்பாவை தோன்றியது. விஷ்ணு சித்தர் கண்களில் நீர் மாலை.
'''அசாத்யம், ஸ்ரீயப்பதே, ரங்கநாதா, எல்லாம் உன் கிருபை. என்ன அற்புதம் இந்தக் குழந்தையின் பக்தி ச்ரத்தை. இவ்வளவு காலம் நான் எழுதியதெல்லாம் இந்த ஒரு பாசுரத்துக்கு அம்மா தாயே,
கோதை, நீ லக்ஷ்மி அம்சம் என்பதில் சந்தேகமே. என்ன திவ்யமாக எழுதியிருக்கிறாய். நான் எழுதினத்துக்கேல்லாம் சிகரமாக உன் எழுத்தில் மிளிர்கிறதே. எல்லாம் அந்த ரங்கன் செயல்.
நாளைக்கு நீ எழுதப்போவதையும் ஆவலாக கேட்க காத்திருக்கேன்.
''ஓவ்வொரு நாளும் பாசுரம் எழுதப்போறேன். நீங்க எனக்கு அறிமுகப்படுத்திய அந்த நாராயணன் அவதாரமான கிருஷ்ணன் இருந்த ஆயர்பாடியிலே இடைச்சிறுமிகள் ஒன்றாககூடி யமுனையில் நீராடி நல்ல கணவன் கிடைக்க காத்யாயனி விரதம் இருந்த நோன்பு பற்றியும் எழுதப்போகிறேன்.
+++
வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தரை விட்டுவிட்டு ஆயர்பாடிக்கு செல்கிறோமே அங்கு சில பெண்கள் விடியற்காலையில் கூடியிருக்கிறார்கள். மற்றும் சிலரை எழுப்ப செல்கிறாள் ஆண்டாள் என்கிற சிறுமி. '
''மார்கழி வந்து விட்டதே. எழுந்திருக்க வேண்டாமா. நாம் எல்லாருமாக யமுனைக்கு செல்வோம். அங்கு புனித நீராடி ஸ்ரீ கிருஷ்ணனைப் பணிவோம். அவன் ஒருவன் போதுமே நாம் கேட்டதெல்லாம் அருள.தோழியர்களே எழுந்திருங்கள்.
''என்னடி ஆண்டாள் , இந்த மார்கழி குளிரில் அதிகாலையில் வந்து எங்களை எழுப்பி வா குளிப்போம், பாடுவோம் என்கிறாய். எதற்கு ஏன் என்கிற விஷயம் சொல்லேன்?என்றனர் அந்த ஆயர்பாடி சிறுமியர்
அவளிடம். அவள் சொன்னாள்:
''நான் சொல்றேன் ஆனால்ஒரு நாளைக்கு ஒரு விஷயம் தான் சொல்வேன். அப்போதான்உங்களுக்கு கொஞ்ம் கொஞ்சமா புரியும். ஒரே அடியா ஒரு மாச விஷயத்தை ஒரே நாளில் சொல்லித் திணிக்கக் கூடாது.
இன்னிக்கு மார்கழி 1ம் நாள் ஆண்டாள் என்கிற சிறுமி சொல்ற விஷயம்இது:
"இந்த மார்கழி என்கிற மாசம் ரொம்ப ஒசத்தியானது.எனக்கென்னமோஇந்த மாதம் தான் ரொம்ப பிடிக்கும். வெயில் கிடையாது.
தண்ணீருக்கு பஞ்சமில்லை. இந்த ஊர் என் உயிர். ஏன் என்றால் இதில் தான் கிருஷ்ணன், அந்த ஆண்அழகன் கருநீல வண்ணன் செவ்விதழ், கன்னம் உடையவன்-கண்களோ செந்தாமரை அவன் இருக்கும் நம்முடைய இந்த ஆயர்பாடி, ஒரு ஸ்வர்க பூமி என்பதில் என்ன சந்தேகமடி உங்களுக்கு!!. அவன் சாதாரணமானவனா யிருந்தால் இந்த பேச்சுக்கே இடமிலையே! எதிர்த்தவர்களின்உயிர் குடிக்கும் வீரன் அந்த நந்த கோபனின் பிள்ளையை தவிர வேறு யார்? அவன் தாய் பற்றி சொல்லவில்லையே, இந்த சிங்கக்குட்டியை பெற கொடுத்து வைத்தவள் அவள். யசோதை அவள் பேர்.
''நேரமாச்சே சீக்கிரம் வாருங்கள் தோழியரே, குளிர்ந்த யமுனையில் குளித்து அவனை பாடுவோம்,
''ஆண்டாள் கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன் அப்படி என்ன இதுக்குமுக்கியம்?'' எதற்காக இந்த மார்கழி மாதம் நோன்பு என்று தெரியணும்னாக்க, இந்த மாசம்தான் அந்த கிருஷ்ணனுக்கு, நாராயணனுக்கு பிடிச்ச மாசம். மாதங்களில் அவன் மார்கழியாகவே இருக்கானாம். நாமெல்லோரும் ஏன் இந்த உலகில் எவருமே ஸ்வர்கமடைய நாம் செய்யும் இந்த பாவை நோன்பு தவிர குறுக்கு
வழி வேறே இல்லை அல்லவா?
பெண்கள் ஸ்நானம் முடித்து கூட்டமாக சேர்ந்து நாராயணனை நெக்குருகி, மனமுருகிப்பாடி , வெள்ளை உள்ளத்தோடு வேண்டி அன்றைய நோன்பைத்தொடங்கினர். பிறகு தத்தம் வீடு திரும்பினர். மார்கழி மாதம் நம்அனைவராலும் ஸ்ரீ வில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை
தரிசனம் செய்ய இயலுமா? சென்னை வாசிகளே! திருவல்லிக் கேணி தான் சென்னையின் வில்லிப்புத்தூர். அங்கு மார்கழி முழுதும் கோலாகலமாக விமரிசையாக ஆண்டாள் நீராட்டு விழா, பிரபந்த பாசுரம் எதிரொலிக்க, விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் திவ்யதரிசனம் கிடைக்கிறதே, விடாமல் போவோம். நம்மால் முடிந்த நோன்பு இதையாவது செய்வோமே. கிளம்புங்கள் எல்லோரும் உடனே போவோம்