Post by Amritha Varshini on Nov 22, 2013 6:44:57 GMT 5.5
குயிலே குயிலே நீ யாரோ? (article by Sri Pattabiraman - vijayakoti33@gmail.com)
நீதானோ அந்தக் குயில்?
இசைக் குயில், ஞானக் குயில், மோனக் குயில்,
கானக் குயில் என்று பல இனிமைகளை
குயிலோடு தொடர்பு படுத்தி பேசுவது தமிழ் மரபு.
குயிலோசையை வெல்லும்
கண்ணனின் குழலோசை என்ற பாடல் பிரசித்தம்
சோகத்தையும் மகிழ்ச்சியையும்
வெளிப்படுத்தும் குயிலின் குரல்
வெளிப்படாத திரைப்படபாடல்கள்
இல்லை எனலாம்.
குயிலின் வடிவமும் அழகு
அதன் குரலும் அழகு
அதிகாலையில் அது க்ரீசிட்டுக் கொண்டு
பறந்து சென்று அனைவரையும் துயிலெழுப்புவது அழகு.
மார்கழி மாத பனி சூழ்ந்த இரவில்
அது எழுப்பும் இனிமையும் சோகமும் கலந்த
அந்த குரல் கேட்பவர் மனங்களை பாதிக்காமல் விடாது.
குயிலைப்பாடாத பற்றி பாடாத
கவிஞர்களே கிடையாது. பாரதியார் குயில் பாட்டு
என்று ஒரு அத்தியாயமே பாடி விட்டார்.
ஆண் குயிலும் பெண் குயிலும் மாறி மாறி இனிமையாக
குரல் எழுப்பி அங்குமிங்கும் பாடிக்கொண்டு
பறந்து செல்வதை காண்பது
இனிமையான அனுபவம்.
காகங்களுக்கும் குயில்களுக்கும் என்றும் பகை .
காகம் குயிலை விரட்டுவதும் அது லாவகமாக
தப்பி மரக் கிளைகளுக்கும் புகுந்து கொள்வதும்
பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்
இவ்வளவு அருமையாக குரலை தனக்குள் வைத்திருக்கும்
குயிலுக்கு இருக்க கூடு கிடையாது.
அது தன் முட்டைகளை காகத்தின் கூட்டில் இட்டுவிடும்.
காகம் அதை குஞ்சு பொரித்து விடும்.
இறைவனின் அற்புதம் பாருங்கள் !
அந்த குஞ்சுகள் தனக்கு பறக்கும் சக்தி வரும் வரைக்கும்
வாய் திறந்து குரல் எழுப்பாது.
பறந்து வெளி வரும்போதுதான்
குயில்போல் ஒலிழுப்பும். .
அப்போதும் அந்த காகத்திற்கு
அது குயில் என்று தெரியாமல்
அதக்கு கா கா என்றுகூவப்பயிற்சி கொடுக்கும்.
அந்த காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கும் .
கு என்றால் குமரன் ,குயிலி,
குருவாயூரப்பன் என்று இறைவன் பெயர்களை குறிக்கும்
இல் என்றால் இறைவன் இருக்கும் இடம் வீடு
குயிலின் உள் இறைவன் இருக்கின்றான் ,
அதனால்தான் இருளில் ஒளி வடிவான
இறைவன் வெளிப்படுவதைப் போல்.
கருமையான குயிலின் வாயிலிருந்து
இனிமையாக குரலாய் இறைவன் ஒலிக்கின்றான்.
இவன் வீட்டெதிரே குயில் ஒன்று
ஒய்யாரமாக அமர்ந்திருந்தது.
படம் பிடித்தேன்.
ஒரு குயில் மற்றொரு குயிலுக்கு
மந்திர உபதேசம் செய்கிறது .
என்ன மந்திரம் ?
ராம மந்திரம்தான்.
அதுதானே நம்மையெல்லாம்
கடைதேற்றும் மந்திரம்.