|
Post by jksivan on Nov 3, 2013 10:17:58 GMT 5.5
ஒரு கவிதை எழுதி பார்ப்போமே என்று தோன்றி
மறு யோசனையின்றி நட்பென்றே பேர் கொடுத்து
சட்டென்று இதை ஒரு தட்டு தட்டி இதோ உங்கள் முன்
பாட்டென்ற பேரில் புது பரிணாமம்
நட்பு ஒன்றே சிறந்த உறவு.
நட்பு ஒன்றில் தான் மனம் நாட்டம் மிக்கதாக பரிமளிக்கும்
கடனே என்று பழகுவது உறவில் தோன்றும் போது மனம் வலிக்கிறது
உடனே அந்த இடம் விட்டோ ஆளை விட்டோ நகரக் கால் துடிக்கிறது
அகமும் புறமும் வேறு வேறாகவா உளது
நகமும் சதையும் போலவா அது ரெண்டும் எப்போதும்
அகத்தில் மகிழ்ச்சி இருந்தால் முகம் தானே பிரகாசிக்கிறதே
விகசிக்கும் பூவின் மணம் வேரிலிருந்து தானே வெளி வந்தது.
மனமெனும் கடலின் ஓயா நினைவலைகள்
மணல்பரப்பில் சுவடுகள் பதித்தன
பல சுவடுகள் தோன்றி மறைந்தாலும் ஏனோ
சிலர் பதித்த சுவடுகளோ சிலையாய் நின்றனவே
உடல் வேறு உள்ளம் வேறு என் றெவரும் அறிவரே
உடலின்றி உள்ளத்தை பார்க்கமுடியுமா?
கர்ப்பூரமிருந்ததால் தான் காகிதமும் மணக்கும்
சிற்பமாய் அழகோடு நிற்பவை யாவும் சிற்பியின் மனமன்றோ
காந்தமென கவர்ந்ததுவும் சேர்ந்த மனம் ஒன்றிடவும்
விந்தையில்லை இதிலொன்றும் இயற்கையன்றி வேறில்லை
இரண்டுமனம் ஒன்றானால் வெண்ணை நெய்யாகும்
திரண்டுவரும் அலையெல்லாம் திரும்பவும் நீராகும்
தெரிந்து தான் திருமூலரும் அழகாக இதை சொன்னார்
அன்பும் சிவமும் வேறு என்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பரே
|
|