Post by jksivan on Nov 3, 2013 9:26:18 GMT 5.5
கொஞ்சம் ஆத்ம விசாரம் !!
தீபாவளி நேரத்தில் "'ஒளி'' பற்றி பேசுவது சாலப் பொருந்தும். நமது உடலில் அதி முக்கியமானது கண்.
இருண்ட பிரபஞ்சத்திற்கு சூர்ய ஒளி எப்படியோ அப்படியே நமக்கு கண். அது ஒளியைக்காட்டிலும் ரொம்ப விசேஷமானது. கண் இருந்தால் தானே ஒளியை அறிய முடியும்.! கண் இருந்தால் மட்டும் போதாது. அது பார்வை உள்ளதாக இருக்க வேண்டும். நன்றாக தெரிய வேண்டும். இதிலும் முக்கியம் என்னவென்றால் கண் தெரிந்தாலும் அதை ''பார்'' என்று சொல்ல மனமும் புத்தியும் வேண்டும். கண் எதையும் தானே பார்க்காது. கண் இல்லாமலேயே மனம் பார்க்க முடியும். ஆனால் மனம் இல்லாமல் கண் எதையும் பார்க்க முடியாது. அசந்து தூங்கும்போது கனவிலே எத்தனையோ கொள்ளை கொள்ளையாக காட்சிகளை தத்ரூபமாக காண்கிறோமே, கண் திறந்தா இருக்கிறது அப்போது? மனத்தால் கண்ணை காதை, நாக்கை ஏன் ஐம்புலன்களை உண்டாக்கிக்கொள்ள முடியும். அவற்றால் அனுபவம் பெற இயலும். ஒரு விஷயம். மனத்தை இவ்வாறு செயல் படுத்த ஒன்று தேவை. அது தான் உள்ளே இருக்கும் ஆத்மா. மனது தானாக செயல் படாது. ஆத்மாவின் ஆக்ஞை அதற்கு தேவை. அங்கிருந்து தான் மனம் ஒளி யை பெற்றும் கண்ணை பெற்றும் காட்சிகளைக் காண்கிறது. சரி அப்படியென்றால் தூக்கத்தில் மனம் தானாக இயலவில்லையா? ஆமாம். ஆத்மாவின் ஆணைக்குட்பட்டு மனம் இயங்கி அனுபவம் பெறுகிறது. இல்லாததை இருப்பதாக காண்கிறது. அதுவே ஆத்மாஅல்லது பிரம்மம் என்கிற பரம்பொருளின் லீலை.
பகவான் ரமண மகரிஷி அருணாச்சல அக்ஷமனமாலையில் நாற்பது செய்யுளில் கூறுவது இது ஒன்று. ஆத்மாவை ''அந்தமிலாக் கண் '' -- முடிவில்லாதது என்கிறார். அருணாச்சலமே கண்ணின் பாவை, பார்வையும் கூட. நமது ஐம்புலன்களின் ஓட்டம், அதை ஆட்டுவிக்கும் மனத்தின் ஆட்டம், பற்றியெல்லாம் குறிப்பிடும்போது கேநோபநிஷதத்தில் அந்த பிரம்மத்தை, சக்தியை, ''காதுக்குகே காதாக'', ''மனதிற்கே மனதாக'' '' சொல்லின் சொல்லாக'' ''மூச்சினுடைய மூச்சாக'' ''கண்ணின் கண்ணாக '' என்று வருகிறது. இதற்காகத்தான் சிவ பெருமானுடைய நெற்றிக்கண் மூன்றாவது கண்ணாக, அதாவது ''கண்ணின் கண்ணாக'' காணப்படுகிறது.
கண்ணின் பார்வை நமக்கு கடவுளால் கொடுக்கப்பட்டது. '' கடவுளுக்குக் கண் இல்லையா"' என்கிறோமே. உண்மையில் கடவுளுக்குக் கண் அவர் பார்வைக்குத் தேவையற்றது. சர்வமும் அவரே என்றபோது எதை அவர் பார்க்க வேண்டும்? சகலமும் அவரே என்பதால் அனைத்து அனுபவமும் அந்த பிரம்மமே. அவரால் தான் நாம் விரும்பும் அனுபவங்களைப் பெற்று அதன் பலனைத் துய்க்கிறோம். அந்த அனுபவம் எதிலும் அவருக்குப்பன்கில்லை. முழுமையும் அவரே என்றிருக்கும்போது ஒரு துளி ஒரு துண்டு எங்கோ, எதிலோ அவருக்கு ஏன்? அனுபவத்துக்கு உட்பட்டவர்களுக்கு தான் அதில் பங்கு. பிரம்மத்திற்கு எதுவும் சம்பந்தப்படாது. மாம்பழம், மாங்காய் தரும் அதன் புளிப்பும் இனிப்பும் அனுபவிக்கிறதா. அடையும் நாம் தானே பலனை உணர்கிறோம்.
''நீ யார், நான் யார்" வேறல்ல, ஒன்றின் பல தோற்றங்களில் ஒன்று !! இன்னும் ரமணரை நிறைய புரிந்து கொள்வோம்
தீபாவளி நேரத்தில் "'ஒளி'' பற்றி பேசுவது சாலப் பொருந்தும். நமது உடலில் அதி முக்கியமானது கண்.
இருண்ட பிரபஞ்சத்திற்கு சூர்ய ஒளி எப்படியோ அப்படியே நமக்கு கண். அது ஒளியைக்காட்டிலும் ரொம்ப விசேஷமானது. கண் இருந்தால் தானே ஒளியை அறிய முடியும்.! கண் இருந்தால் மட்டும் போதாது. அது பார்வை உள்ளதாக இருக்க வேண்டும். நன்றாக தெரிய வேண்டும். இதிலும் முக்கியம் என்னவென்றால் கண் தெரிந்தாலும் அதை ''பார்'' என்று சொல்ல மனமும் புத்தியும் வேண்டும். கண் எதையும் தானே பார்க்காது. கண் இல்லாமலேயே மனம் பார்க்க முடியும். ஆனால் மனம் இல்லாமல் கண் எதையும் பார்க்க முடியாது. அசந்து தூங்கும்போது கனவிலே எத்தனையோ கொள்ளை கொள்ளையாக காட்சிகளை தத்ரூபமாக காண்கிறோமே, கண் திறந்தா இருக்கிறது அப்போது? மனத்தால் கண்ணை காதை, நாக்கை ஏன் ஐம்புலன்களை உண்டாக்கிக்கொள்ள முடியும். அவற்றால் அனுபவம் பெற இயலும். ஒரு விஷயம். மனத்தை இவ்வாறு செயல் படுத்த ஒன்று தேவை. அது தான் உள்ளே இருக்கும் ஆத்மா. மனது தானாக செயல் படாது. ஆத்மாவின் ஆக்ஞை அதற்கு தேவை. அங்கிருந்து தான் மனம் ஒளி யை பெற்றும் கண்ணை பெற்றும் காட்சிகளைக் காண்கிறது. சரி அப்படியென்றால் தூக்கத்தில் மனம் தானாக இயலவில்லையா? ஆமாம். ஆத்மாவின் ஆணைக்குட்பட்டு மனம் இயங்கி அனுபவம் பெறுகிறது. இல்லாததை இருப்பதாக காண்கிறது. அதுவே ஆத்மாஅல்லது பிரம்மம் என்கிற பரம்பொருளின் லீலை.
பகவான் ரமண மகரிஷி அருணாச்சல அக்ஷமனமாலையில் நாற்பது செய்யுளில் கூறுவது இது ஒன்று. ஆத்மாவை ''அந்தமிலாக் கண் '' -- முடிவில்லாதது என்கிறார். அருணாச்சலமே கண்ணின் பாவை, பார்வையும் கூட. நமது ஐம்புலன்களின் ஓட்டம், அதை ஆட்டுவிக்கும் மனத்தின் ஆட்டம், பற்றியெல்லாம் குறிப்பிடும்போது கேநோபநிஷதத்தில் அந்த பிரம்மத்தை, சக்தியை, ''காதுக்குகே காதாக'', ''மனதிற்கே மனதாக'' '' சொல்லின் சொல்லாக'' ''மூச்சினுடைய மூச்சாக'' ''கண்ணின் கண்ணாக '' என்று வருகிறது. இதற்காகத்தான் சிவ பெருமானுடைய நெற்றிக்கண் மூன்றாவது கண்ணாக, அதாவது ''கண்ணின் கண்ணாக'' காணப்படுகிறது.
கண்ணின் பார்வை நமக்கு கடவுளால் கொடுக்கப்பட்டது. '' கடவுளுக்குக் கண் இல்லையா"' என்கிறோமே. உண்மையில் கடவுளுக்குக் கண் அவர் பார்வைக்குத் தேவையற்றது. சர்வமும் அவரே என்றபோது எதை அவர் பார்க்க வேண்டும்? சகலமும் அவரே என்பதால் அனைத்து அனுபவமும் அந்த பிரம்மமே. அவரால் தான் நாம் விரும்பும் அனுபவங்களைப் பெற்று அதன் பலனைத் துய்க்கிறோம். அந்த அனுபவம் எதிலும் அவருக்குப்பன்கில்லை. முழுமையும் அவரே என்றிருக்கும்போது ஒரு துளி ஒரு துண்டு எங்கோ, எதிலோ அவருக்கு ஏன்? அனுபவத்துக்கு உட்பட்டவர்களுக்கு தான் அதில் பங்கு. பிரம்மத்திற்கு எதுவும் சம்பந்தப்படாது. மாம்பழம், மாங்காய் தரும் அதன் புளிப்பும் இனிப்பும் அனுபவிக்கிறதா. அடையும் நாம் தானே பலனை உணர்கிறோம்.
''நீ யார், நான் யார்" வேறல்ல, ஒன்றின் பல தோற்றங்களில் ஒன்று !! இன்னும் ரமணரை நிறைய புரிந்து கொள்வோம்