|
Post by Amritha Varshini on Aug 3, 2013 10:47:18 GMT 5.5
Postings by Sri Pattabi Raman (vijayakoti33@gmail.com)
விக்னேஸ்வர ஸ்தோத்ரம்
தெலுங்கு மொழியில் இயற்றப்பட்டுள்ள தியாகப்ரம்மத்தின் கீர்த்தனைகளை தமிழில் வெளியிட்டால் அதை அனைவரும் கீர்த்தனைகளின் பொருளுணர்ந்து கேட்க வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த பணியினை தொடங்குகின்றேன்
விநாயக பெருமானின் அருளால் இந்த பணி வெற்றிபெற வேண்டி. தியாகராஜ ஸ்வாமிகள் விநாயக பெருமான் மீது இயற்றிய கீர்த்தனையின் பொருளைப் பார்ப்போம்.
கீர்த்தனை(1)-கிரிராஜசுதா தனைய சதய ராகம்-பங்காள-தாளம்-தேசாதி
மலைமகள் தனயனே! தயை பொருந்தியவனே!
இந்திரன் முதலியோரால் தொழப்படும் பாதனே!
என்னைக் காத்தருள் !யானை முகத்தவனே!
சிவகணங்களுக்குத் தலைவனே! பராத்பர! நலம் புரிபவனே!
வேதங்களென்னும் கடலுக்கு சந்திரன் போன்றவனே! ஆதிசேடனைக் கங்கணமாக அணிந்தவனே!
இடையூறுகளைப் போக்குபவனே! சிவகுமாரனே!
ஸ்ரீ தியாகராஜனால் வணங்கப்பெருபவனே!
நலம் புரியும் வலம்புரி விநாயகனை பணிவோம் இடர் நீக்கும் இடம்புரி விநாயகரை சிந்தை செய்வோம்
|
|