Post by Amritha Varshini on Aug 3, 2013 10:37:17 GMT 5.5
தேனான வேமனா
1950 ல் யாரோ ஒரு வெள்ளையர் எழுதிய ஒரு புத்தகம் என் வழியில் வந்தது. அதைப் படிக்க ஆரம்பித்தேன்.
நமது நாட்டில் ரிஷிகள் எண்ணற்றவர், தவம் செய் முனிவர்கள் பலர், வேத சாஸ்திர விற்பன்னர்கள் அநேகர். கற்றுணர்ந்த பண்டிதர்கள் கணக்கற்றவர். இவற்றில் சேராத இயற்கையிலேயே ஞானிகளாக உலா வந்தவர் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்.. அவருள் பலரை நாம் முழுதும் அறிந்து கொள்வதற்குள் அவர்கள் முடிந்துவிட்டனர். அவர்களில் ஒரே ஒற்றுமை, அவர்கள் முறைப்படி கல்லாதவர்களோ அல்லது அன்றாட பேச்சு வழக்கிலேயே மிக உன்னத தத்துவங்களை உணர்த்தியவர்களோ பலன் எதுவும் எதிர்பாராமல் விளம்பரம் தேடாமல் அமைதியாக
நம்மில் ஒருவராக வாழ்ந்த வழி காட்டிகளோ, பல வேறு மொழிகளில் தமது ஞானத்தை, பொன்மொழிகளை, தத்துவத்தை சிந்தனை முத்துக்களை நமக்கு ஊட்டியவர்கள் என்ற ஒன்றுதான், இருளைப்போக்கும் தீபங்கள். அவர்களில் ஒருவரை பற்றித்தான் அந்த புத்தகத்தில் அறிந்தேன் அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆவல் அதிகரித்ததால் இந்த செய்தி மடல் உங்கள் கையில்.
கிட்டத்தட்ட -700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரெட்டியார் வம்சத்தில் உதித்த பக்த வேமனா ஏறக்குறைய ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் புனைந்தவர் எல்லாமே எளிய அன்றாட, கொச்சையான, புரியும்படியான தெலுங்கில், வழக்கில் உள்ளது. லட்சோப லக்ஷம் தெலுங்கர்கள், படித்தவர், படிக்காதவர் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் பழமொழியாக, வார்த்தைகளாக, சொல்லாக மிளிர்பவை வேமனா வின் சொல்லோவியங்கள்.
ஞானஸ்தர்களும் பண்டிதர்களும் கூட கையாள விரும்புவது இவையே. இந்த சிறு சிறு
நல்வழிப் பாடல்கள் மக்களைத்திருத்தி இறைவன் பால் வழிகாட்டுபவனவாக இன்றும் நடைமுறையில் உள்ளதே இவற்றின் சிறப்பு .
கொண்டவீடு என்ற கிராமத்த்தில் ஜனனம். ரெட்டியார்கள் ஆண்ட காலம். அந்த ராஜவம்சத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும் வேமனா ஒரு எளிய ஞானி. மறைந்தது கத்தரப்பள்ளி என்கிற ஊரில். அங்கு வேமனாவின் சமாதி இன்னும் உள்ளது. ஒரு தரம் அந்த சமாதிமேல் மின்னலோடு இடி தாக்கி சமாதியைப் பிளந்தது. அதிலிருந்து வேமனா ஒரு பன்னிரெண்டு வயதுள்ள பாலகனாக தாக்கிய இடி மின்னலைக் கையில் பிடித்துக் கொண்டு வெளிவந்து மீண்டும் அதனுள்ளேயே சென்றார் என்று ஒரு செய்தி (நம்புவதா? வேண்டாமா? என்பது உங்கள் சித்தம்) . ஆனால் பலர் நம்புவதை நாமும் நம்புவதால் தவறு ஒன்றுமில்லையே. மகான்களுக்கு எதுவும் சாத்தியம்.
வேமனாவின் பாடல்களில் தர்ம ஞாயம், நேர்மை, வாழ்க்கை நிலையில்லாமை, பண்பாடு, இடைவிடாத பக்தி, உலக இயல், மக்களின் எதிர்பார்ப்பு, சகலமும் அடங்கும்
தூங்குபவனை சாட்டையடி கொடுத்து எழுப்பி திசை திருப்புகிறதே அவரது சக்தி வாய்ந்த ரெட்டை அடி கவிதைகள்!!
ஒரு ரெட்டை அடி கவிதை சொல்கிறது "உன்னுள்ளே இதயத்தில் உயிரோட்டமுடன் இருப்பவனை எங்கோ சென்று கல்லில் தேடாதே. அவன் உயிரில் இல்லாமல் கல்லிலா இருக்க விரும்புவான்"
மற்றொன்று சொல்கிறேன்
" உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் வண்டி வண்டியான அழுக்கை நீக்காமல் உ டலை வருத்தி வாட்டி யோகியாவது பாம்பை அடிக்கிறேன் என்று புற்று மண்ணை அடிப்பது போலவே"
இன்னுமொன்று கூட சொல்கிறேனே.
"இறைவா உன்னைப் பார்க்கையில் நான் இல்லை. என்னையே நினைத்துக் கொண்டு உன்னைப் பார்க்கும்போது நீ காணோம். எப்படி ஆற்றில் ஒருகால் சேற்றில்
ஒருகாலாக உன்னையும் என்னையும் நான் ஒரு சேற நான் காண இயலும்?"
தர்மிஷ்டன் யார் என்று சொல்கிறார் ஒரு ரெட்டையடி வாசகத்தில்.
" எவன் கஷ்டப்பட்டு தானியமெல்லாம் பொருக்கி, சேர்த்து, களைந்து, இடித்து, பொடித்து, சமைத்து , பசியோடு வாடுபவனுக்கு உணவாக போடுகிறானோ அவனைச் சிவன் என்றால் தப்பா"?
உப்பும் கர்பூரமும் பார்ப்பதற்குத்தான் வெள்ளை. அதனதன் குணத்திலும் ருசியிலும் வடதுருவம் தென் துருவம் இல்லையோ? மக்களில் அவ்வாறே ஞானிகளும் சூன்யங்களும் வெளியே பார்க்க ஒன்றாக இருப்பர்"
அருமையான தெலுங்கில் சரளமாக இவற்றை அனுபவிக்க நமக்கு தெலுங்கு தெரியாதே! . பரவாயில்லை. தெலுங்கை ருசிக்க முடியவில்லையானாலும் அர்த்தத்தை ரசிக்கலாமே என்ற எண்ணத்தில் சிலவற்றை எனக்குத் தெரிந்த எளிய முறையில் மொழி பெயர்த்திருக்கிறேன் ( மேலே கண்டவை போன்று)
மேற்கொண்டு நிறைய எழுத வேமனாவின் பொக்கிஷம் அள்ள அள்ளக் குறையாது கொட்டிக் கிடக்கிறதே. எடுத்துக் கொடுத்தால் படிப்பீர்களா? தொடரட்டுமா? அவற்றைத் தொடட்டுமா?
1950 ல் யாரோ ஒரு வெள்ளையர் எழுதிய ஒரு புத்தகம் என் வழியில் வந்தது. அதைப் படிக்க ஆரம்பித்தேன்.
நமது நாட்டில் ரிஷிகள் எண்ணற்றவர், தவம் செய் முனிவர்கள் பலர், வேத சாஸ்திர விற்பன்னர்கள் அநேகர். கற்றுணர்ந்த பண்டிதர்கள் கணக்கற்றவர். இவற்றில் சேராத இயற்கையிலேயே ஞானிகளாக உலா வந்தவர் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்.. அவருள் பலரை நாம் முழுதும் அறிந்து கொள்வதற்குள் அவர்கள் முடிந்துவிட்டனர். அவர்களில் ஒரே ஒற்றுமை, அவர்கள் முறைப்படி கல்லாதவர்களோ அல்லது அன்றாட பேச்சு வழக்கிலேயே மிக உன்னத தத்துவங்களை உணர்த்தியவர்களோ பலன் எதுவும் எதிர்பாராமல் விளம்பரம் தேடாமல் அமைதியாக
நம்மில் ஒருவராக வாழ்ந்த வழி காட்டிகளோ, பல வேறு மொழிகளில் தமது ஞானத்தை, பொன்மொழிகளை, தத்துவத்தை சிந்தனை முத்துக்களை நமக்கு ஊட்டியவர்கள் என்ற ஒன்றுதான், இருளைப்போக்கும் தீபங்கள். அவர்களில் ஒருவரை பற்றித்தான் அந்த புத்தகத்தில் அறிந்தேன் அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆவல் அதிகரித்ததால் இந்த செய்தி மடல் உங்கள் கையில்.
கிட்டத்தட்ட -700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரெட்டியார் வம்சத்தில் உதித்த பக்த வேமனா ஏறக்குறைய ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் புனைந்தவர் எல்லாமே எளிய அன்றாட, கொச்சையான, புரியும்படியான தெலுங்கில், வழக்கில் உள்ளது. லட்சோப லக்ஷம் தெலுங்கர்கள், படித்தவர், படிக்காதவர் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் பழமொழியாக, வார்த்தைகளாக, சொல்லாக மிளிர்பவை வேமனா வின் சொல்லோவியங்கள்.
ஞானஸ்தர்களும் பண்டிதர்களும் கூட கையாள விரும்புவது இவையே. இந்த சிறு சிறு
நல்வழிப் பாடல்கள் மக்களைத்திருத்தி இறைவன் பால் வழிகாட்டுபவனவாக இன்றும் நடைமுறையில் உள்ளதே இவற்றின் சிறப்பு .
கொண்டவீடு என்ற கிராமத்த்தில் ஜனனம். ரெட்டியார்கள் ஆண்ட காலம். அந்த ராஜவம்சத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும் வேமனா ஒரு எளிய ஞானி. மறைந்தது கத்தரப்பள்ளி என்கிற ஊரில். அங்கு வேமனாவின் சமாதி இன்னும் உள்ளது. ஒரு தரம் அந்த சமாதிமேல் மின்னலோடு இடி தாக்கி சமாதியைப் பிளந்தது. அதிலிருந்து வேமனா ஒரு பன்னிரெண்டு வயதுள்ள பாலகனாக தாக்கிய இடி மின்னலைக் கையில் பிடித்துக் கொண்டு வெளிவந்து மீண்டும் அதனுள்ளேயே சென்றார் என்று ஒரு செய்தி (நம்புவதா? வேண்டாமா? என்பது உங்கள் சித்தம்) . ஆனால் பலர் நம்புவதை நாமும் நம்புவதால் தவறு ஒன்றுமில்லையே. மகான்களுக்கு எதுவும் சாத்தியம்.
வேமனாவின் பாடல்களில் தர்ம ஞாயம், நேர்மை, வாழ்க்கை நிலையில்லாமை, பண்பாடு, இடைவிடாத பக்தி, உலக இயல், மக்களின் எதிர்பார்ப்பு, சகலமும் அடங்கும்
தூங்குபவனை சாட்டையடி கொடுத்து எழுப்பி திசை திருப்புகிறதே அவரது சக்தி வாய்ந்த ரெட்டை அடி கவிதைகள்!!
ஒரு ரெட்டை அடி கவிதை சொல்கிறது "உன்னுள்ளே இதயத்தில் உயிரோட்டமுடன் இருப்பவனை எங்கோ சென்று கல்லில் தேடாதே. அவன் உயிரில் இல்லாமல் கல்லிலா இருக்க விரும்புவான்"
மற்றொன்று சொல்கிறேன்
" உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் வண்டி வண்டியான அழுக்கை நீக்காமல் உ டலை வருத்தி வாட்டி யோகியாவது பாம்பை அடிக்கிறேன் என்று புற்று மண்ணை அடிப்பது போலவே"
இன்னுமொன்று கூட சொல்கிறேனே.
"இறைவா உன்னைப் பார்க்கையில் நான் இல்லை. என்னையே நினைத்துக் கொண்டு உன்னைப் பார்க்கும்போது நீ காணோம். எப்படி ஆற்றில் ஒருகால் சேற்றில்
ஒருகாலாக உன்னையும் என்னையும் நான் ஒரு சேற நான் காண இயலும்?"
தர்மிஷ்டன் யார் என்று சொல்கிறார் ஒரு ரெட்டையடி வாசகத்தில்.
" எவன் கஷ்டப்பட்டு தானியமெல்லாம் பொருக்கி, சேர்த்து, களைந்து, இடித்து, பொடித்து, சமைத்து , பசியோடு வாடுபவனுக்கு உணவாக போடுகிறானோ அவனைச் சிவன் என்றால் தப்பா"?
உப்பும் கர்பூரமும் பார்ப்பதற்குத்தான் வெள்ளை. அதனதன் குணத்திலும் ருசியிலும் வடதுருவம் தென் துருவம் இல்லையோ? மக்களில் அவ்வாறே ஞானிகளும் சூன்யங்களும் வெளியே பார்க்க ஒன்றாக இருப்பர்"
அருமையான தெலுங்கில் சரளமாக இவற்றை அனுபவிக்க நமக்கு தெலுங்கு தெரியாதே! . பரவாயில்லை. தெலுங்கை ருசிக்க முடியவில்லையானாலும் அர்த்தத்தை ரசிக்கலாமே என்ற எண்ணத்தில் சிலவற்றை எனக்குத் தெரிந்த எளிய முறையில் மொழி பெயர்த்திருக்கிறேன் ( மேலே கண்டவை போன்று)
மேற்கொண்டு நிறைய எழுத வேமனாவின் பொக்கிஷம் அள்ள அள்ளக் குறையாது கொட்டிக் கிடக்கிறதே. எடுத்துக் கொடுத்தால் படிப்பீர்களா? தொடரட்டுமா? அவற்றைத் தொடட்டுமா?