|
Post by Amritha Varshini on Nov 29, 2018 4:56:14 GMT 5.5
வீட்டில் நிம்மதிக்கு சிறந்த வழி - கிருஷ்ண ஜபம் காயத்ரீ ஜபம் ஸ்த்ரீகளும் புருஷர்களும் சேர்ந்து குடும்பம் நடத்துவது வீடு. எந்த வீட்டில் ஸ்த்ரீகள் கிருஷ்ண ஜபத்தையும் புருஷர்கள் காயத்ரீ ஜபத்தையும் பழக்கப்படுத்தி கொள்கிறார்களோ அந்த வீட்டில் துக்கமும் நிஷ்ட்டூர வார்த்தைகளும் தூர விலகி நிற்கும். கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கும் கலியின் வியாபாரம் தான் துக்கம். அல்ப காரணத்திற்காக வீட்டில் அர்த்தமில்லாத சண்டை / மனஸ்தாபம் ஏற்பட்டால் அது கலியின் வியாபாரம் என்று புரிந்து கொள்ளலாம். கலியை நம்மால் கொல்ல முடியாது. ஆனால் அதன் வீர்யத்தை அடக்கலாம். நெருப்புக்கு விரோதி ஜலம். அது போல கலிபுருஷனுக்கு விரோதி கிருஷ்ண ஜபம், காயத்ரீ ஜபம். வீட்டில் அடுப்பு நெருப்பை அடக்குவதற்கு ஒரு டம்பளர் ஜலம் போதும். அது போல வீட்டுச் சண்டை, நிஷ்ட்டூரத்தை நீக்குவதற்கு பத்து கிருஷ்ண ஜபம் பத்து காயத்ரீ ஜபம் போதும். வேண்டுமானால் ஒரு முறை பரீக்ஷித்துப் பார்க்கவும். எல்லோருக்குமே அன்றாட வாழ்க்கையில் அவரவர்களுக்குத் தனித்தனி உபத்ரவங்கள் இருந்தே தீரும். அவற்றின் மத்தியில் அன்றாடம் பத்து நிமிஷ ஜபம் பழக்கம் வைத்துக் கொள்வது அவசியம். இப்பழக்கம் அம்ருதம் போன்றது. இம்மாதிரி ஜபத்தோடு கூடிய வாழ்க்கையில் ரகசியமான மனநிறைவு, மனநிம்மதி இருக்கும். ஜபம் இல்லாத வாழ்க்கையில் அது இருக்காது. சின்ன உபத்திரவங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமற் போகும். எடுத்ததெற்கெல்லாம் விபரீத கோபம் வரும். எப்போது பார்த்தாலும் வீட்டில் நிஷ்ட்டூர வார்த்தைகள். இதற்கெல்லாம் (antidote) அருமருந்து கிருஷ்ண ஜபம் காயத்ரீ ஜபம்.
|
|