|
Post by Amritha Varshini on May 12, 2016 6:46:19 GMT 5.5
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
நாம் இப்போதே செய்ய வேண்டியது
அது ஆகிற போது ஆகட்டும். நாம் உடனே பண்ண வேண்டியது என்ன? அவர்கள் 14 வயசு, 16 வயசு, 18 வயசு என்று ஏதோ ஒரு வரம்பு வைத்திருந்தால், அந்த வரம்பு தாண்டின உடனேயாவது கல்யாணத்தைப் பண்ணி விடுவதற்கு முன் கூட்டியே வரன் பார்த்து மற்ற ஏற்பாடுகளையெல்லாம் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்.
எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த வயசில் கல்யாணம் பண்ண இடமிருக்கிறதோ அவ்வளவு குறைந்த வயசில் பண்ணி விட வேண்டும்.பெண்கள் நீண்ட கால்ம் மனோவிகாரப்பட்டுக் கொண்டிருக்கும்படி விட்டால் அது நமக்கு பாபம் என்கிற பய உணர்ச்சியோடு இந்த விஷயத்தில் இனியாவது காரியம் செய்யவேண்டும். தானே தட்டிப் போனால் வேறு விஷயம். புருஷ யத்தனம் இல்லாமலிருந்தால் அது பெரிய தப்பு.
அப்படியே எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த செலவில் பண்ண வேண்டுமோ அப்படிப் பண்ண வேண்டும்.
|
|