|
Post by Amritha Varshini on Jan 16, 2016 7:28:04 GMT 5.5
Dear Anand
The PORUL URAI of the poem is excellent. Though I am not a tamil literate, it can be said with certainty that the rhyme, rythm and alliteration of the poem is eminently pleasing. The grace of the Lord is clearly showing in this creation.
It is common to see people going in search of the Guru all their lifetime and in rare cases finding one. There are also rare cases when the Guru goes in search of the discipline like in the case of Manivasagam.
Let us pray that grace pour in abundance on all of us and we the rare ones to say like Manivasagam "ETHARKU PORUL AVANE".
V.Ramachandran 2016-01-16 1:55 GMT+05:30 V Kannan <kannan.v71@gmail.com>
|
|
|
Post by Amritha Varshini on Feb 9, 2016 11:16:26 GMT 5.5
நமஸ்காரம்
தாங்கள் கட்டுரையாளர் என்றுமட்டும் எண்ணியிருந்தேன். ஆனால் கவிதைக் கலையும் உங்கள் கைவசம் வாய்த்திருப்பதையே திருவாசகக் கவிதைகள் காட்டி நிற்கின்றன. நானும் ஒரு கவிதைப் பைத்தியம்தான். ஆனால் உங்கள் கற்பனைக்கும், சொல்லாட்சிக்கும், எதுகை மோனை சந்தம் அத்தனைக்கும் நான் அடிமை. அவ்வளவு அழகும், ஓசையும், இக்கவிதைகள் அத்தனையிலும் கண்டேன். உங்கள் கவிதைகளை உன்னிப்பாக வாசிப்பவர்கள் நிச்சயம் மணிவாசகரையும், திருவாசகத்தையும், தேடுவார்கள். உங்களது சொல் ஆட்சி அனைவரையும் திருவாசகத்தை நாடவே வைத்துவிடும் ! இது வெறும் வார்த்தையல்ல ! உண்மையான நிலை !
உங்களின் கவிதைகளுக்கு .. கவிதைகளால் கருத்துச் சொன்னால் நல்லதாக இருக்கும் என நினைத்துச் சில கவிதைகளை எழுதினேன். அதனையும் இத்துடன் இணைக்கின்றேன். படித்துப் பாருங்கள்.
"பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவிவலவ" என்று சேக்கிழார் போற்றப்படுவார்.
"தித்திக்கும் வாசுதேவா" என்று உங்களை அழைக்கலாம் போலத் தோணுகிறது. இதோ எனது கருத்துக் கவிதை ( உங்களைப் பற்றி )
ஆனந்தவாசுதேவ அர்த்தம் நிறை கவிதை தந்தாய் தேனான திருவாசகத்தை திரும்பியே பார்க்க வைத்தாய் ஊனையே உருக்கிவிடும் உன்சொற்கள் உலாக் கண்டேன் வானவரும் வாழ்த்துரைக்க வையகத்தில் வளம் பெறுவாய் !
மணிவாசகம் அருள்வாசகம் இவ்வாசகம் திருவாசகம் சிவஞானம் மெஞ்ஞானம் அருள்ஞானம் ஆத்மஞானம் அத்தனையும் இப்பாட்டில் உருவாய் அருவாய் குருவாயுளது ஆதலால் ஆனந்தம் பேரானந்தம் சிவானந்தம் பிரமானந்தம்தந்தது !
ஆதிமூலம் சொன்ன அற்புதப் பேராளன் அருமையாய் கவிபுனையும் அறிவுடை சீராளன் தமிழினை துணைகொண்ட தகவுடை மணாளன் தரணிதனில் உன்பாட்டு பக்தியின் தாலாட்டு !
தங்களின் ஆற்றலால் தரணியே பயன் பெற எனது ஆசிகள் !
அன்புடன்
எம் . ஜெயராமசர்மா 2016-02-09 1:12 GMT+05:30 Jeyaraman <jeyaramiyer@yahoo.com.au>
|
|
|
Post by Amritha Varshini on Mar 2, 2016 6:46:19 GMT 5.5
திருவாசக சாறினை ஆசிரியப் பாவில் எழுதியிருப்பது அழகிலும் அழகு.
-கண்ணன்சேகர்.
2016-02-22 19:25 GMT+05:30 Kannansekar Sekar <kannansekarp@gmail.com>
|
|