|
Post by Amritha Varshini on Nov 21, 2015 18:23:13 GMT 5.5
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா தர்மத்தினை நிலை நாட்ட ஜோதிப் பிழம்பதனில் உதித்து அசுரர்குலம் தனை மாய்த்து தேவர்களின் துயரமதை நீக்க சிக்கலிலே வேல் எடுத்து சக்தியவள் கொடுக்க வஞ்சகமாய் சூரபத்மன் மாமரமாய் மறைந்து நிற்க வேலனவன் கூர்வேலினால் சூரன் நெஞ்சமதைப் பிளக்க மயிலுமாயும் சேவலாயும் தன்னில் சேர்த்துக் கொள்ள ஜகத்குரு அருணகிரியோர் உந்தன் பெருமைபாடி நிற்க பாதயாத்திரை பசி நித்திரை கடும் விரதம் ஏற்று கடலருகில் அலைகடலென திரளும் பக்தர் பெருவெள்ளம் செந்திலாண்டவருக்கு விண்ணை பிளக்கும் ஆரோஹரா கோஷம் பன்னீரிலை விபூதிசந்தனமதை தரிப்போர்க்கு நோய்நொடிகள் நீங்கும்
அலைவாய் அமர்ந்த பெருமானை காணக் கண்கோடி வேண்டும் சஷ்டி விழா காண வரும் பக்தர் பெருங் கூட்டம் குகன் திருவடிகள் தொழுவோர்க்கு வாழ்வில் என்றும் ஏற்றம் ஆனந்த் வாசுதேவன் 17th Nov 2015 | கந்த சஷ்டி
|
|
|
Post by Amritha Varshini on Nov 21, 2015 18:25:22 GMT 5.5
திரு வாசுதேவன் அவர்களுக்கு
ஆசீர்வாதம் இப்பொழுதுதான் படிக்க நேரம் கிடைத்தது . மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் எழுதியவற்றையெல்லாம் ஒரு தொகுப்பாக வைத்துக் கொள்ளுங்கள் . மறுபடியும் மறூபடியும் படித்தால் உங்களுக்கே ஏதவது சேர்க்கத் தோன்றும் . . நான்கு தரம் நீங்கள் எழுதியதை தாளத்துடன் படித்தால் சந்தம் விட்டுப்போனால் அது தெரிந்து விடும் . நீங்கள் மேன்மேலும் கவிதைகள் எழுத அந்த முருகன் உதவிபுரியட்டும்
சஷ்டி விரதத்தினைச் சந்தமுடன் கேட்டு நாம் மட்டிலாத மகிழ்ச்சிய டைந்தோம் மனதாலே எட்டமுடியா எண்குண பஞ்சரனை என்றும் தட்டழியாது தாரணையே செய்திட்டோம் கட்டழகு வாசுதேவன் வடித்த கவிதையினை கற்றவரும் மற்றவரும் கண்டு களித்தோமே வட்ட உலகத்தே மகிழ்ந்து வலம் வர வேல் தொட்ட கரத்தனை ஏத்தி வணங்குவோமே! ---- உமா பாலசுப்ரமணியன்
Mail received from Smt Uma Balasubramanian (Daughter of Sri Ki.Va. Jaganathan, Editor or Kalaimagal Magazine) 2015-11-19 11:39 GMT+05:30 uma kbs <uma_kbs@yahoo.com>:
|
|
|
Post by Amritha Varshini on Nov 21, 2015 18:28:00 GMT 5.5
மிகவும் அருமை திரு வாசுதேவன்.
அதுவும் சஷ்டியன்று படிக்கக் கிடைத்தது மிகவும் விசேஷம்.
இந்த சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
உமா குருராஜன். சிங்கை 2015-11-17 8:47 GMT+05:30 UmaGuru <guruma@singnet.com.sg>
|
|
|
Post by Amritha Varshini on Nov 21, 2015 18:28:57 GMT 5.5
Great Anand ,
KEEp on writing more poems,
Ramachander 2015-11-17 6:28 GMT+05:30 rama chandar <raja-thatha@outlook.com>
|
|
|
Post by Amritha Varshini on Nov 21, 2015 18:30:00 GMT 5.5
My dear Anand,
I have read it again and again. It is so beautiful. Kannile Othikkalam Pole Irukku. Wonderful. You feel like reading it again and again. This is a Makutam to Kanda Sashti celebrations. Go ahead. Publish it.
Krishnan On Mon, Nov 16, 2015 at 6:32 AM, Vs Krishnan <vsk1940@gmail.com>
|
|