|
Post by Amritha Varshini on Sept 20, 2015 7:11:57 GMT 5.5
ராகம்: மத்யமாவதி இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ )
உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்து ஆடுதே எனவே
ஆடலை காண (கண்ணா உன் ) தில்லை அம்பலத்து இறைவனும் தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார் ஆதலினால் சிறு யாதவனே ஒரு மாமயில் இறகு அணி மாதவனே நீ
சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதைச்செவிமடுத்த பிறவி மனங்களித்திடுமே பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே மயில் பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமே
பன்னிருகை இறைவன் ஏறுமயில் ஒன்று தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே குழல் ஆடிவரும் அழகா பாடி வரும் அழகா உனைக் காணவரும் அடியார் எவராயினும் கனக மணிஅசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே
Here is the link to hear the divine music sung by
Sri Pithukkuli Murugadas
Smt Sudha Raghunathan
Violin Sri Kunnakudi Vaidyanathan
|
|